Saturday, December 12, 2009

அன்புள்ள.....

அன்புள்ள....

உன்னை என்னவென்று அழைப்பது.....யாதுமாகி என்னில் நிற்கின்றாய்....நீ என்பது நான்.... நான் என்பது நீ.....சரிதானே நான் சொல்வது.....உன் அருகாமைக்காக என்மனது ஏங்கித் தவிக்கிறது....அன்புள்ள என்றுதான் உன்னை அழைக்கத் தோன்றுகிறது....நீயே அன்பாக இருப்பதால்.....நீ கொடுத்துவிட்டுச் சென்ற முத்தத்தின் மீதம் என்னில் இருக்கிறது எப்போது வந்து எடுத்துச் செல்வாய்...என்னை உன்னில் அழுத்திக்கொள்வாய்

நானும் உனக்காக உன் அருகாமைக்காக தவமாய் தவம் இருக்கிறேன் தவிப்புடன் உன்னை என்னில் வரித்துக்கொள்ள...ஆனாலும் நீ அவர்களுக்கு தேவையாய் இருக்கிறாய் ஏதோ ஒரு விதத்தில்.....என்னில் ஏக்கத்தில் இருந்து, என் உலகத்தில் இருந்து, என்னில் இருந்து வேறுபட்டு....

இருந்தாலும் இந்த இடைவெளி காலத்தின் கட்டாயம்.....இந்த கட்டாயத்தை இல்லாமல் செய்துவிடமுடியாதா மனம் கேட்கிறது...பதில்தான் என்ன...

Monday, August 31, 2009

கடிதம்

நீ தேடும்போது நான் மட்டும்

உன்னோடு இருக்கையில்

நீ மட்டும் ஏனோ தானே

வரவேற்கிறாய் வேதனைகளை

ஏனோ எனக்கு வலிகளாகத் தருகிறாய்

******

உன்னைத்தான் நான் என் எல்லை

என்றிருக்க.....

என் எல்லை ஏனோ என்னைத்தாண்டி

போகிறது
என்னை விட்டு தூரமாய்

*****

உயிர் வாழும் கொஞ்சகாலம்

உனக்கு நான் உண்மையாய் இருக்கும்

சந்தோசம் தரமாட்டாயா என் அன்பே

என்னை தவிக்கவிட்டு

என் அன்பை உதறி விட்டு

உணர்வுக்கு அடிமையாய் போவதென்ன

என் நெஞ்சம் உன்னைக் கண்டு நோவதென்ன ....

*****

காலம் ஒரு நாள் மாறும்

என் கவலைகள் யாவும் தீரும்

என்றிருக்க

என்னை ஏந்திழையாள்

ஏக்கம் கொள்ள செய்வதென்ன

*******

கனவில் நினையாத

காலம் இடைவந்து

நம்மைப் பிரித்தாளும்

ஆலமரக்கிளையில்

ஆடி வந்த அன்றில் பறவை

ஒன்றை விட்டு ஒன்று உயிர் வாழாது

காணாமல் உயிர் போகாது...

*******

இந்தக்குயில் பாடும்

உயிருடனும்

சாகவரமாய் காதலுடனும்

உனக்காக

பாடுவதில் அதற்கு சந்தோசம்தான்

********

Tuesday, August 25, 2009

எப்படி?

தவறாக எண்ணிக்கொண்டு

என்னிடமிருந்து விலகி விடாதே

நான் தவறாமல் உன்னிடம் பேசவேண்டும்

அதுமட்டுமே நம் காதலின் எல்லை

அதற்கும் எல்லை என்றால் எப்படி....?

*******

Friday, July 17, 2009

நினைவலை

நீ என் கைப்பிடித்துச் சொன்ன
விஷயங்கள் நினைவில் அலைமோத
உனக்கான வாசனையை விட்டுச்சென்ற
என் கையை மறுபடி ஒருமுறை
தொட்டுச் செல்லமட்டாயா.....!
மறுபடியும் கொஞ்சம்
உயிர் வாழ்ந்து கொள்கிறேனே....
உன் நினைவாக....

ஏக்கம்

முடிவில்லாமல் நீளும்

இரவுகள்....

உணர்வுகளோடு நிதமும்

போராட்டம்.....

அருகாமைக்காக ஏங்கும்

உன் நினைவலைகள்....

மழை நாளின் முடிவில்

அந்த புன்னைமர இலை

சிந்தும் பனித்துளி .....

தயங்காமல் எடுத்துச் சொல்லும்

என் ஏக்கத்தை.....

Monday, July 6, 2009

தவிப்பு

எப்படி சொல்வது என்று தெரியவில்லை......தெரியாமலேயே போகட்டும் என் நிலை. அவளுக்கு நான் தப்பானவனாகவே இருந்துவிட்டுபோகிறேன்....அந்தமட்டும் அந்த திருப்தி அவனுக்கு போதும்...

இனிமேல் அவனுக்காக எதுவும் அவள் செய்யபோவதில்லை. ஏனென்றால் அவளின் மனது அவனுக்காக யோசிக்கப்போவது இல்லை.....அன்பையும், பாசத்தையும் கூட பரிமாறிக்கொள்ள போவதில்லை....பாவம் அவளும் எவ்வளவு நாள்தான் அவனோடு போராடுவாள்.....அவளாவது நன்றாக இருக்கட்டும்....

அவனின் மனது அவளுக்காக ஏங்கி ஏங்கி துடித்துக்கொண்டிருக்கிறது .....அவனுக்கு உரிமை உள்ள இடத்தில் ஆசை இல்லை ....ஆசை உள்ள அவளிடத்தில் உரிமை இல்லை...அவளின் சூழ்நிலை அவளை மௌனமாக்கி அவனை கைதிஆக்கி வேடிக்கை பார்க்கிறது....

அவனின் தேவை அவள் மட்டும்தான்.....அவனின் சேவை அவளுக்கு மட்டும்தான் ...அவனின் ஆசை அவளோடு மட்டும்தான் .....அவனின் பரிமாற்றம் அவளோடு மட்டும்தான் ....

ஆனால் அவளின் தேவை அவர்களுக்கு தேவையாய் இருக்கிறது ....அவளின் பரிமாற்றம் அவர்களுக்கு தேவையாய் இருக்கிறது ....அவளும் பந்தப்பட்டு நிற்கிறாள் ........ஏன் இந்த பாடு.......அவன் கண்களில் நீர் வழிகின்றது....மனது துடிக்கின்றது ....மாற்றிக்கொள்ள முயல்கிறான்.....

எப்படி இருக்கப் போகிறான்.....தெரியவில்லை....இருந்தாலும் அவளுக்கு அந்த சிரமத்தை கொடுக்க அவன் விரும்பவில்லை....அவளுக்கு அவன் தப்பானவனாகவே இருந்துவிட்டுப் போகிறான்......

அவன் வீட்டு தோட்டத்தில் அவர்களின் மல்லிகைச் செடியை உயிர்கொடுத்து வளர்த்தான்....மனதுக்குள் பொத்திவைத்து பூஜித்தான்....அவனுக்குத்தான் வாசம்தரும் அந்த மல்லிகை என்று இறுமாப்பு கொண்டிருந்தான்.....

ஆனாலும் அந்த மல்லிகை அவர்களுக்கும் பந்தப்பட்டு வாசம் கொடுக்கிறது.....கொடுக்கும் என்று தெரிந்த பிறகு அவன் அந்த மல்லிகைக்காக அழுகிறான்....நீ யார் உரிமை கொண்டாட தோட்டக்காரன் கேட்கிறான்...அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை....உணமையைச் சொன்ன அந்த தோட்டக்காரன்முன் அவன் செய்வதறியாது தவிக்கிறான்.....

அவனுக்கே அந்த மல்லிகைச்செடி சொந்தம் என்று நினைத்துவிட்டான்....அதனால் அவன் தோட்டத்தில் பூத்திருந்த மற்ற செடிகளை அவன் காபந்து செய்தானே தவிர உயிராய் நினைத்தது அந்த ஒரு செடியைத்தான் .....அதுவும் அதன் சொந்தக்காரன் கேட்பான் என்று எதிர்பார்த்தே அவன் உயிரைக்கொடுத்து அதை வளர்த்தான் .....ஆனால் இவ்வளவு சீக்கிரம் அது நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை......

அவன் அழுவது அந்த மல்லிகைச் செடிக்காகவா....இல்லை அதன் சொந்தக்காரனுக்காகவா....இல்லை அவனுக்காகவா....இல்லை அந்த உயிருக்காகவா ......எதற்காக அவன் அழுவது....கண்கள் வற்றிப்போகிறது....

நடப்பதெல்லாம் கனவாக இருக்கக்கூடாதா....அவன் கண்கள் கடைசி நேர நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது......தோட்டக்காரனை பரிதாபமாய் அவன் பார்க்கிறான்.....தோட்டக்காரனின் எண்ணம் மல்லிகைச் செடிமேலேயே இருக்கிறது.....அவனின் வேண்டுதல் எதுவும் தோட்டக்காரன் காதில் விழவில்லை.....

பாவம் மல்லிகை......உரிமைக்காக போராடுவதா...உறவுக்காக போராடுவதா.....அது தவிக்கிறது....

ஐயோ இது என்ன கனவு அலறியபடி அவன் படுக்கையைவிட்டு எழுந்திருக்கிறான் உடம்பு நடுங்குகிறது.....மனது பதைக்கிறது....

மௌனமாகிறான்.....அவளின் கேள்வி அவனை துளைக்கிறது....அவனால் சொல்ல முடியவில்லை .....சொல்லவும் தெரியவில்லை....அவனின் உயிர் அவனுக்கில்லையா?

Wednesday, July 1, 2009

சாஸ்வதம்

அவனுக்குத்தெரியும் அவளின் ரணம்..... இருந்தாலும் அவள் அதை சொல்லி இருக்கக்கூடாது.... தெரியாமல் சொல்லிவிட்ட வார்த்தைகளினால் எவ்வளவு முரண்பாடு என்று அவளுக்கும் அவனுக்கும் இப்போது தெரிந்திருக்கும்......
அவனின் ஒவ்வொரு செயலும் அவளுக்காக பார்த்து பார்த்து செய்யும் பட்சத்தில் ஏதோ ஒன்று அவளின்மூலம் வெளிப்பட்டு மனது ரணமாகிறது அவளுக்கும் அவனுக்கும்....
எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இருந்து என்ன பயன். பார்வையாளனாய் ஒரு விமர்சகனாய் அவளின் வாழ்க்கைக்கு இருக்க அவன் பிரியப்படவில்லை....அவளுக்கு உணர்வாய் உறவாய் உயிராய் இருக்கவே அவனுக்கு பிரியம்.....அதைத்தான் அவனும் விரும்புகிறான் ....
அவன் கேட்பது அவளின் பாதியாய் தான் மாற....அவளுக்கு புரியுமா அவனின் தவிப்பு....எதற்காக துடித்துக்கொண்டிருக்கிறது அவனின் இதயம் என்று....
தெரியாமல் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் எவ்வளவு சோகங்களை போர்த்திக்கொள்கிறது என்பது அவளுக்கு தெரியாதா என்ன?
இருந்தும் இடறல்கள் வந்து விடுகிறது அவளுக்கும், அவனுக்கும் ....புரியாத தருணங்கள்....தொலைந்து போன நாட்களை அவன் சாட்சிக்கு அழைக்கவில்லை ...அவளுக்கு அவனின் சாஸ்வதம் புரிந்தால் சரி ....

Monday, June 29, 2009

ஏக்கம்

இன்னும் எத்தனை முறைதான்

என்னை தவிக்க விடுவாய்....

உன்னை ஏதோ ஒரு விதத்தில்

நெருங்கிவிட்டேன் என நினைக்கும்போது

எண்ணச் சிதறலாய் ஏதோ ஒன்று

என்னை உன்னிடமிருந்து தள்ளி

வைத்து தவிக்கவிடுகிறதே கண்மணி ....

*****

உன் தாக்கம் என்னில் முழுமையாக

ஆக்கிரமித்துக்கொண்டு

உணர்வோடும், உயிரோடும் எம்மை

பிணைத்துக்கொள்ளும் தருணங்களை

நான் எவ்வாறு பழிகொடுப்பேன் கண்மணி....

******

உனக்கான அலைவரிசை

நான்தான் எனும்போது

இந்த தொலைவரிசை என்னை

ஒன்றும் செய்ய முடியாதுதான்....

இருந்தாலும்...

மனதின் ஓரம் உனக்கான ஈரக்கசிவு

என்னை தடுமாற வைக்கிறதே கண்மணி....

*******

சற்று தாமதமானாலும்

எனக்காக வரவேண்டும் முழுநிலவு

இன்னொருமுறை

அமவாசையானாலும் .....

உன் முகம் பார்த்து நான் விழிமூட.....

*******

கைப்பிடிக்க நானும்

கைகொடுக்க நீயும்

தயாராய் இருக்கும்போது

நமக்கான தருணங்களை

அமைத்துக்கொள்ள இன்னமும்

தாமதமென்ன கண்மணி....

*******

காத்திருக்கும் பூ கூட

காம்புடன் காத்திருக்கும் போது

என்னை மட்டும் வாசமாய் விட்டுவிட்டு

என் சுவாசத்தை எடுத்துக்கொண்டு போவதென்ன

கண்மணி ...

*******

Friday, June 19, 2009

என் உயிருக்கு ஓர் நம்பிக்கை கடிதம்

ஒவ்வொரு நாளின் முடிவில்லா
தருணங்களில்
உன் ஒவ்வொரு அசைவும்
உணர்வாய் என்னை துளைக்கிறது
கேள்விகளால்......
*******
எனக்காக பதிலாய் நீ இருப்பாய்
என்றுதான் உன்னை சரணடைந்தேன்
நீயே கேள்வியாய் இருக்கிறாய் எனும்போது
தடுமாறித்தான் போகிறேன்
எனக்கான இடத்தை தேடி...
********
நான் தேடும் ஒவ்வொன்றும்
உனக்கான பதிலாக நான்
இருக்கமாட்டேனா என்பதுதானே
நீயோ கேள்விக்குள்ளேயே பதிலைத்
தேடுகிறாய் ...
********
எல்லோருக்கும் போராட்டம் வாழ்கையின்
ஒரு பகுதி
உனக்கு போராட்டமே வாழ்கையாய் போனது
விதியின் விளையாட்டுத்தான்......
*******
உன்னை மீறி ஒவ்வொன்றும்
நடக்கும்போது
வாடிப்போன உன் முகத்தை
கையில் ஏந்திக்கொள்ள தோன்றுகிறது
*******
உன் தோளோடு தோள் சேர
நான் இருக்கும் போது
சில வேளைகளில் உன்னை
மறந்து துடிப்பது ஏனோ....
******
உனக்கான வலியை தாங்கிக்கொள்ள
எம் இதயம் இருக்கும்போது
உன்னை மறந்து உன் இதயம்
எதை தேடுகிறது.....
******
வெறும் கற்பனைக்கு அல்ல என் காதல்
காலம் தோறும் கைப்பிடிக்கத்தான்
என் காதல்...
சுகத்துக்கல்ல என் காதல்
உன் வாழ்நாள் முழுதும் தாங்கும்
வலியாய் இருக்கும் என் காதல்....
கைப்பிடிக்கவல்ல என்காதல்
கரை சேரவும்தான் என் காதல்....
காலங்களைத்தாண்டி நம் காதல்
ஜெயித்துக்கொண்டே இருக்கும்....
*******




Friday, June 12, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 12

ஒவ்வொரு முறையும் நீ என்னை பார்க்கும் போது என்னோடு பேசமாட்டாயா என்னுடனே வந்துவிடு என்று கூப்பிடமாட்டாயா என்றுதான் மனது ஏங்குகிறது ......
குறைந்தபட்சம் உன் கைகளை என்கைகளோடு பிணைத்துக்கொள்ள மாட்டாயா என்று எதிர்பார்கிறது .....
சூழல் அமைவதில்லை...அமைந்தாலும் நீ சந்திக்கும் பிரச்சனைகளின் வீரியம் அந்த நினைவை மறக்கச் செய்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது ......
நானும் எதிர்பார்ப்பை குறையாமல் அனுதினமும் உன்னிடம் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறேன் .......
உன் தொடுதல் இல்லாத அரவணைப்பு என்னை உன் மீதான ஏக்கத்தை அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது ......
ஒருமுறையேனும் என்னை அணைத்து உச்சி நுகர மாட்டாயா .....
ஒரு முறையேனும் என் கைப்பிடித்து உன் கைகளுக்குள் சிறை வைக்கமாட்டாயா ....
ஒரு முறையேனும் என்னை ஏந்திக் கொள்ளமாட்டாயா .....
ஒரு முறையேனும் என்னை ........
இப்பொழுதெல்லாம் நம் கைகள் கட்டப்பட்டே இருக்கின்றன
ஏக்க பெருமூச்சாய் என் மூச்சு உன்னைச் சுடவில்லையா ....

Monday, June 8, 2009

வடிகால்

என்னதான் மனதை மாற்ற முயன்றாலும் உன்னையேதான் மனது நாடுகிறது ....எவ்வளவோ தடுத்து கேட்டு அதட்டி பார்த்துவிட்டேன் கேட்கமாட்டேன் என்கிறது மனம்....என்ன செய்யச் சொல்கிறாய் ...
எனக்குத் தெரியும் நான் செய்வது எல்லாமே தான்தோன்றித்தனம், சுயநலம் எல்லாமே ....என்ன செய்வது நான் எனக்காக வாழவேண்டும் என்று உன்னை பார்த்தபின்புதான் ஆசைப்பட்டேன்....அதுவும் உன்னுடன், உனக்காகவே வாழ்ந்து தேய்ந்துவிடவேண்டும்.....
எனக்கென்று வாழ்கை இருக்கிறது.....அதனுள் எல்லாமே என்னை நம்பி அந்த உயிரும் இருக்கிறது....நான் வேண்டாம் என்று ஒதுக்கவில்லை.....நீயும் வேண்டும் என்றுதான் கேட்டேன்....அதுவும் எனக்காக வேண்டும் ....எனக்கே எனக்காக....
உன்னுடைய வாழ்கைச் சூழ்நிலை எனக்கு தெரியாமல் இல்லை ......தெரிந்துதானே உன்னிடம் வந்தேன்.....ஆனாலும் உன்னைத்தானே நாடுகிறது மனம்....
உன்னுடைய வாழ்க்கைக்கு என்னால் எந்த இடையூறும் வராது....எந்த சூழ்நிலையிலும் ......அதை தெரிந்து கொண்டுதான் என்னை உன்னுடன் பிணைத்துக்கொள்ள இவ்வளவு போராட்டம்.....
வாழ்க்கைத்துணை அவசியம்தான்.....ஆனால் அதுவே எனக்கு முரண்பாடு எனும்போது என்னைச் சகிக்க முடியாத ரணம் என்னுள் சாட்டை அடியாய் ......
நான் பழிவாங்கவும் இல்லை...பாபத்தைச் செய்யவும் இல்லை என்னை நம்பியவர்களை கை விடவும் இல்லை.....அவர்களுக்கான கடமைகள் அவர்களுக்கு அதில் எல்லாமே அடக்கம்....
ஆனால் என்னால் உன்னைத்தவிர அவர்களை ஒத்துக்கொள்ள முடியவில்லை....இனிமேலும் முடியுமா என்பது கேள்வி....
இனி செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை ....ஊமையாய் இருந்துவிட்டு போகிறேன் ......எனக்கு இது தேவையான ஒன்றுதான் .....அனுபவித்துவிட்டுப்போகிறேன்
அமைதிக்கு மறுபெயர் ஊமைதானே.....
என் செல்வங்களின் முன்னேற்றம் எனக்கு இனிமேல் உறுதுணை ....
முடிந்தால் கைகுடுங்கள்.....
உனக்கான வாழ்கை முறையை நான் தடுக்கவில்லை....தடுக்கவும் விரும்பவில்லை ......அதில் என் தலையீடு நிச்சயமாக இருக்காது .....எனக்காக வருந்தாதே .......எனக்கான பாதையை நான் நிர்ணயிதுக்கொண்டுவிட்டேன் என்றுதான் தோன்றுகிறது....பாதை நிறைய முட்கள்...கற்கள் ....குத்தும் கிழிக்கும் என்று எனக்கு தெரியும் .......எனக்கு அது ஒன்றே போதும்...
அடிபட்டல்தானே வாழ்க்கை .......





Sunday, June 7, 2009

கவர்ந்த பாடல் - 11

நான் படு மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்க வில்லையா
கண்ணீரில் உன்னை தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
******
உன்னைக்கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக்கான வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக்கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைப்பாடி பாடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இங்கு குயிலதானே தேடுது
******
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது
காம்பு என்ன வாழ்வது
காலம் என்னை கேள்வி கேட்குது
கேள்வி இங்கு கேலியாகி போனது
******
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்க வில்லையா
கண்ணேரில் உன்னை தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன் ......

Saturday, June 6, 2009

மனவிலாசம்

ஒவ்வொரு முறையும்

என்னை புரிந்து கொள்ளாமல்

என் எதிர்பார்புகளை

நீ தெரியாமல் விலக்கும்போது

தடுமாறித்தான் போகிறேன் நானும் ....

******

கோப பிரவேசங்களில்

என் கொடுஞ் சொற்கள்

உன்னை தாக்கும் வேகம் தாளாமல்

நீ சுருளும் போது தாங்கிப் பிடிக்க

துடிக்கிறது என்மனம்

ஆனால் புரிந்து கொள்ளாமல்

விலகிப்போகிறாயே என் செய்வேன் நான் ...

*******

உனக்கான கோபம் மாதிரியே

எனக்கான கோபமும் ....

உனக்கான உணர்வுகள் மாதிரியே

எனக்கான உணர்வுகளும்.....

உனக்காக ஆறுதல் மாதிரியே

எனக்கான ஆறுதல் எங்கே என் அன்பே ....

******

ஓடி வந்து உன் கைகளில்

அடைக்கலமாகும் தருணங்களில்

நானிருக்க.....

கடைக்கண் பார்வையாய்

என்னை பரிதவிக்க விட்டு போவதென்ன

என் அன்பே ......

******

எல்லா நிமிடங்களும்

கடந்து போன பின்பு

பறந்து போன ஏக்கங்களை

மேற்கோள் காட்டி என்னை

தவிக்க வைத்து போவதென்ன என் அன்பே...

******

ஒவ்வொரு முறையும்

நீ கேட்பாய் என்று எதிர்பார்த்த

நிமிடங்களை நான் கண்ணிமைக்கும்

நேரத்தில் தவறவிட்டு

என் கோப தருணங்களில்

நீ கசங்கிய கவிதையாய்

மாறும்போது நான்

நொறுங்கித்தான் போகிறேன்

******

ஆனாலும்

என் சுவாசக்காற்றாய்

நீ இருக்கையில்

என் சுவாசத்தை நான் எப்படி

அடைத்துக்கொள்ள முடியும் ....

உயிர் வாழ முடியும் ....

*****

என் இயக்கமும் நீதான்

இயக்குபவளும்

நீதான்

எனக்கான காதலும் நீதான்

எனக்கான ஜீவனும் நீதான்

எனக்கான வெற்றியும் நீதான்

எனக்கான கோபமும் நீதான்

எனக்கான ஆறுதலும் நீதான்

எனக்கான காமமும் நீதான்

எனக்கான காவலும் நீதான்

யாதுமாகி யதுமாகியும் நீதான்

என் அன்பே

*******

உன்னில் ஒன்றி

உனக்கான ஏக்கமாய்

நானிருக்க

விரிந்த உன் இதயம் போல்

உன் கரங்களில் அடைக்கலமாகும்

இந்த வழி தவறிய ஆட்டுக்குட்டிக்கு

காலம் எப்போ வரும் கண்ணே

வழி மாறி விழி நீரோடு காத்திருக்கிறேன்

உனக்காக

தாய்மடியாய் உன் மென்மைக்காக ......

*********

கவர்ந்த பாடல் - 10

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்

நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்

ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்

ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீருற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே

கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே

பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால்

முகப்பரு ஞாபகமே

அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்

அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே

வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே

தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே

அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்

மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்...

கவர்ந்த பாடல் - 9

என்னை யாரென்று எண்ணி எண்ணி

நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடல் என்று

நீ கேட்கிறாய்

நான் அவள் பெயரை தினம்

பாடும் குயிலல்லவா

என் பாடல் அவள் தந்த

மொழியல்லவா ...

என்னை யாரென்று எண்ணி எண்ணி

நீ பார்க்கிறாய் ......

கவர்ந்த பாடல் - 8

சிலர் அழுவார்

சிலர் சிரிப்பார்

நான் சிரித்துக்கொண்டே

அழுகின்றேன்

சிலர் அழுவார்

சிலர் சிரிப்பார்

நான் அழுதுகொண்டே

சிரிக்கின்றேன் ...

காலம் ஒருநாள் மாறும்

என் கவலைகள் யாவும் தீரும்

வந்ததை எண்ணி அழுகின்றேன்

வருவதை எண்ணி சிரிக்கின்றேன்

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் .....

கவர்ந்த பாடல் - 7

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும் ...

******

எனது கைகள் மீட்டும் போது

வீணை அழுகின்றது

எனது கைகள் தழுவும்போது

மலரும் சுடுகின்றது

என்ன நினைத்து என்னை படைத்தான்

இறைவன் என்பவனே !

கண்ணை படைத்தது

பெண்ணை படைத்தாய்

இறைவன் கொடியவனே .....

******

பழைய பறவை பறந்த போது

பறந்து வந்ததே

புதிய பறவை எனது நெஞ்சை

கவர்ந்து போனதே

இன்று மட்டும் அமைதி இருந்தால்

வணங்குவேன் தாயே...!

இன்று மட்டும் அமைதி இருந்தால்

உறங்குவேன் தாயே .....!

*****

கவர்ந்த பாடல் - 6

விழியில் விழுந்து

இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக்கொள்ளும்

அந்தி பொழுதினில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையினில் இருப்பேன்

உயிரை திருப்பி தந்து விடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது

இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும் எனது

உயிர் உருகும் சத்தம் ....

கவர்ந்த பாடல் - 5

உள்ளத்தின் கதவுகள் கண்களடா

இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா

உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு

அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு ....

*****

காதல் என்பது தேன்கூடு

அதை கட்டுவதென்றால் பெரும்பாடு

காலம் நினைத்தால் கைகூடும்

வெறும் கற்ப்பனை என்றால் மனம் வாடும் ...

கவர்ந்த பாடல் - 4

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்கையில் நடுக்கமா
*****
வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை ...
எதையும் தாங்கும்
இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும்
அமைதி பிறக்கும் .......
*******
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு ...
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
******

கவர்ந்த பாடல் - 3

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

தெய்வம் ஏதுமில்லை...

நடந்ததையே நினைத்திருந்தால்

அமைதி என்றும் இல்லை...

முடிந்த கதை தொடர்வதில்லை

இறைவன் ஏட்டினிலே

தொடர்ந்த கதை முடிவதில்லை

மனிதன் வீட்டினிலே..

*******

ஆயிரம் வாசல் இதயம்

அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்

யாரோ வருவார் யாரோ இருப்பார்

வருவதும் போவதும் தெரியாது

ஒருத்தர் மட்டும் குடியிருந்தால்

அமைதி தொடர்ந்து விடும் ......

கவர்ந்த பாடல் - 2

உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி...
உள்ளம் என்பது ஆமை ....
*******
தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
உள்ளம் என்பது ஆமை....
*******
தண்ணீர் தணல் போல் தெரியும்
செந்தனளும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும்
அது நாள்பட நாள்பட புரியும்.....
உள்ளம் என்பது ஆமை .....
********

கவர்ந்த பாடல்

குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் அவளை
மறந்து விடலாம்....
அவளை மறப்பதற்கு ஒரு மனமிருந்தால்
குடித்து விடலாம் ....
ஆனால் இருப்பதோ ஒரு மனம்...ஒரு மனம் ...
என்ன செய்வேன்...என்ன செய்வேன்...
******


இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாழ ஒன்று

மறந்து வாழ ஒன்று

இரண்டு மனம் வேண்டும்....

******

இரவும் பகலும் இரண்டானால்

இன்பமும் துன்பமும் இரண்டானால்

உறவும் பிரிவும் இரண்டானால்

உள்ளம் ஒன்று போதாதே....

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாழ ஒன்று

மறந்து வாழ ஒன்று ...

இரண்டு மனம் வேண்டும்....

**********

கண்களின் தண்டனை காட்சி வழி

காட்சியின் தண்டனை காதல் வழி

காதலின் தண்டனை கடவுள் வழி

அந்த கடவுளை தண்டிக்க என்ன வழி

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாழ ஒன்று

மறந்து வாழ ஒன்று ....

********

Friday, June 5, 2009

ஆறுதல்

நீ

மறுபடி மறுபடி

என்னவென்று கேட்கும்போது

மௌனத்தையே என்னால் பதிலாக

கொடுக்கமுடிகிறது

என்னவென்று சொல்ல என்னால்

முடியவில்லை

சொன்னாலும் உன்னால்

அதற்க்கு தீர்வாக

கொடுப்பதற்கு ஒன்றும்

இல்லை .....

முடிந்து விட்ட எல்லைகள்

நம் இருவருக்கும் எமனாக

இருக்கையில்

எதைச் சொல்லி

நான் உன்னிடம் தேற்ற ....

******

என் வருத்தம்

இன்னதென்று தெரிந்து

நீண்ட நாள் நீ வருந்துவதை

காட்டிலும்

இன்னதென்றே தெரியாமல்

ஒரு நாள் மட்டும் வருந்தி

மறந்து போவதொன்றே

எனக்காக நீ கொடுக்கும்

ஆறுதல்...

*******

உனக்கான மெழுகாய்

நான் உருகிவிடவே ஆசை

வெளிச்சம் மட்டும் உனக்கு

கொடுத்து இருட்டில்

கரைந்து போகவே

இந்த மெழுகின் ஆசை....

******

வரமாய் நானிருந்து

உன் துன்பம் நீக்க வேண்டும்

என் சாபத்தை என்னில் நானே

புதைக்கவேண்டும்

புதை குழியில் உன்னைத்தள்ளி

உன் வாழ்க்கைக்கு

நான் முற்றுப்புள்ளியாய்

நானிருக்க விரும்பவில்லை .....

உன் வாழ்கையின்

தொடக்கபுள்ளியாய்

கோலம் போடவே ஆசை

*****

உனக்கான

கேள்விக்கு நான் பதிலாய்

இருக்கவேண்டும் .....

எனக்கான கேள்விகள்

என்னுள் புதைக்கப்படவேண்டும்

நீ உணராமல்...

உனக்கு வலிக்காமல்...

வலிகளையே

பார்த்து பழகிய

உனக்கு

நான் மருந்தாகவே ஆசை

உன் புண்ணிற்கு ...

******

என்னைச் சுற்றிலும்

என் சுற்றம்

என் பொருளையே தேடுகிறது

என்னைத் தவிர

எல்லாவற்றையும் கேட்கிறது ...

*******

வேண்டாத என்னை

என்னவென்று சொல்ல

விருந்தாளியாய்

இருந்துவிட்டு

மொய்யாக உன்னை

கொடுத்துவிட்டு போ

என்கிறது...

என்ன செய்வேன்.....

********

Wednesday, May 27, 2009

காதலியே...

புன்னகையாய் உன் முகம்
மாறும்போது எவ்வளவு
அழகாக இருக்கிறது .....
மொட்டவிழ்ந்த மலர்போல் ....
மலர்ந்த ரோஜா போல் .....
புல்லிதழின் பன்னீர் துளி போல்...
வசீகரமாக இருக்கிறது ....
*****
உன் முகம் பார்த்து சிரிக்கும்
போது உன் கண்களும் ஆயிரம்
கதைகள் சொல்கிறது ......
எனக்கான நிகழ்வுகளை....
என்னில் இருக்கும் உன் இதயத்தை ....
******
உன்னைத் தேடியே என் இதயம்
வருகிறது.....
உன்னை நினைத்தே என் இதயம்
வாழ்கிறது....
உன்னையே என் மனம் நாடுகிறது....
வார்த்தை மாறாமல் உன்
காதலை
என்னிடம் சொல்லிவிடு
******
கனவுகளை கலைக்க
விரும்பவில்லை
உன்னையே அனுதினமும்
நினைத்து....
உன்னையே ஆராதித்து
உன் நிழலாய் என் கண்கள்
பார்க்கையில்
கை தட்டி எழுப்பும்
ஓசைகள் கூட
என்னில் உன் நினைப்பை
மற்ற விரும்புவதில்லை ......
********
நீ கடந்துபோன
கால்தடங்களை எல்லாம்
தொட்டுப்பார்கிறேன்
என் கைகளால்
உன் வெப்பம் உணர்கிறேன்....
என் அருகில் நீ இருப்பதுபோல் ....
*******

Friday, May 22, 2009

வரம்

ஒவ்வொரு முறையும்
நீ
என்னைத் தாண்டிச் செல்லும்போது உன்
மௌன குரலாக ஏதோ
என்னில் உணர்வை
ஏற்படுத்தி விட்டு போகிறாய்
*****
என்னவென்று
அறிய முற்பட்டாலும்
என்னில் இனிக்கும் அந்த
நினைவுகளை
உள்நோக்கி சோதனை
செய்து
உன் மௌனமான
உணர்வுகளை
காயப்படுத்த
விரும்பாமல் விட்டுவிடுகிறேன்
****
சில நேரங்களில்
உன் மௌனமே என்னை
மெளனமாக இருக்கச்செய்து
விடுகிறது
நீ
என்னவென்று விரும்பி
கேட்டாலும்
என்னால் ஒன்றுமில்லை
என்றுதான் சொல்லமுடிகிறது ....
****
என் உணர்வு உன்னைத்தாக்கி
காயப்படுமே என்று
என்னில் அடக்கமாகிறேன்
உன் புன்னகையால்
சமாதானம் ஆகிறேன்....
*****
அந்த என் திருப்தியற்ற
என் பதிலால்
நீ
சமாதனம் ஆகாமல்
என்னில் ஒரு தாக்கத்தை
ஏற்றிக்கொண்டே இருக்கிறாய்
என் நினைவில்
சோக முகம் காட்டி
திரும்ப திரும்ப என்னில்
வந்துகொண்டே இருக்கிறாய்
*****
உன்னை சிரிக்க வைக்கவே
எனக்கு ஆசை
உன்னில் நான் சிரித்தபடி
இருக்கவே ஆசை
உன் மடி சுகம் தேடி ஆறவே
ஆசை
உன்னில் கரைந்து
மறைந்து விடவே ஆசை
****
எனக்கான பதிலாய்
நீ இருக்கிறாய்
உனக்கான உணர்வாய்
நான் இருக்கிறேன்
உன்னில் நான்
உணர்வாய் கலந்து
உயிராய் கரைந்து
என்னை தொலைத்து
கொள்ளவே ஆசை
****
வேண்டும் வரம்எனக்கு
வேண்டும்
தவறாமல் தருவாய்
என்ற மனநிறைவோடு
முதல் புள்ளியை வைக்கிறேன்
கோலம் போடுவது உன்கையில்
என் மனமே.....!
********************************







Thursday, May 14, 2009

மௌனம்

சந்தோசமாக இருக்கிறது உனக்கான
இடத்தில் நானும் எனக்கான
இடத்தில் நீயும் இருப்பதைப் பார்த்து
சரியான இடத்தில் உட்கார்ந்து இருப்பது
சந்தோசமாக இருக்கிறது.....
*******
உனக்கான நினைவுகளை
பதித்துக்கொண்டு அந்த
மரத்தடி நிழலில்
நிற்கும்போது
கடந்து செல்லும் காற்றை
கொஞ்சம் நிறுத்தி
என் இதழ்களால் உன் பெயரை
உச்சரித்து
தென்றல் வருடும் காற்றாய்
உன்னிடம் அனுப்பினேன் .....
******
வந்திருக்கும் உன்னிடம்
என் சுவாசத்தைச்
சுமந்துகொண்டு...
வந்திருக்கும் உன்னிடம்
என் காதலை
தாங்கிக்கொண்டு....
என்ன பதிலை சொல்லி அனுப்பினாய் ....
கொஞ்சம் வருடும் காற்றில்
என் காதை வைத்து கேட்கிறேன் ......
******
உன்குரல் கேட்கிறது ....
என்ன சொல்கிறாய் என்று கேட்கும்
நிலையில் இல்லை என்மனம்
நான் கேட்டது உன்குரலைத்தான்
அது ஒன்றே எனக்கு போதும் ......
****
மௌனமாய் நீ இருந்தாலும்
மயிலிறகாய் உன் மௌனமொழி
என்னை வருடிவிட்டுத்தான் செல்கிறது
*****
உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
என்னை வாட்டிவிட்டுத்தான்
போகிறது ....
*****
என்ன செய்வது
வாடிய இந்த
பயிருக்கு கொஞ்சம்
ஜீவத்தண்ணீரை
ஊற்றும் வள்ளலாக
நீ
இருக்கமாட்டாயா ....
*****
ஒவ்வொரு முறையும்
தடுமாறித்தான் போகிறேன்
உன்னை பார்க்கும்போதெல்லாம்
உன் கோபத்தருணங்களில் கூட
உன் முகம் பார்த்து
தடுமாறித்தான் போகிறேன்.....
*****















Monday, April 27, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 11

உன்னுடன் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் என்னை புதியவனாக உணர்கிறேன் .....உனக்காகவே ஒவ்வொரு நொடியையும் வாழ ஆசைப்படுகிறேன் .......

என்னுடைய வாழ்நாள் முழுவதும் உன்னிடமே கழிக்க ஆசைப்படுகிறேன் ....என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என் உயிரே ......

கடவுள் என்முன் தோன்றி வரம் என்ன வேண்டும் என்று கேட்டாரென்றால் இழந்து போன என் இளமையை உன்னுடன் வாழ எனக்குத் திருப்பித்தா என்று கேட்பேன் .....

இப்பொழுதிருக்கும் என் வாழ்க்கையை மறந்து உனக்கான பகுதிகளை மட்டும் நினைவில் வைத்து வாழவே ஆசை என் அன்பே....

கொஞ்சமே கொஞ்சம் என்கையை பிடித்தாய் என்றால் இந்த நிகழ்வுகளை மறந்து உன்னுடனான தொடுதல்களை நினைத்து கொஞ்சம் வலிகளை மறப்பேன் ....

வாழ்கையில் என்னை ஏணியாக்கி உயர்ந்தவர்கள் ஏராளம்...அவர்களை வாழ்த்துகிறேன் .....ஆனால் என் முதுகிற்குப் பின்னால் பேசுகிறார்களே அவர்களை என்னால் மன்னிக்க முடிவதில்லை ......அந்த உயர்ந்தவர்கள் என்னை பொறுத்தவரையில் தாழ்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் .....இருந்துவிட்டு போகட்டும் ....

அவர்களிடமிருந்து ஒதுங்கவே பிரியம் ....ஒதுக்கி விடுகிறேன் .....உன்னை பார்த்தபின்புதான் என்னால் அவர்களை ஒதுக்கமுடிகிறது .....உன் உந்து சக்தியால்தான் அவர்களிடமிருந்து தப்பிக்கிறேன் ....

என் வாழ்நாள் ஆதாரம்உன் அண்மை ,நெருக்கம்,காதல் எல்லாமே ....அது இல்லையென்றால் நான் காய்ந்த இலைஆகி இருப்பேன் .......இந்த காற்றும் என்னை எங்கோ அடித்துச் சென்றிருக்கும் ......

கனவுகளையே நேசிக்கும் எனக்கு நிதர்சனத்தை காட்டியது உன் அன்பும் பாசமும்தான் .....

கசப்பையே குடித்துப் பழகிய எனக்கு உன் காதலும் நெருக்கமும் அமிர்தத்தை கொடுத்தன .....இப்பொழுது அதையே மனது விரும்புகிறது உன் நிழலிலே வாழ விரும்புகிறது...உன்மடியிலே என்னை தொலைத்துக்கொள்ள மனது விரும்புகிறது .....உன் இளம்சூடான மார்பில் என்னைச் சாய்த்துக்கொள்ள மனது விரும்புகிறது ......இவையெல்லாம் வாழ்நாள் முழுவதும் கிடைக்காதா என்று மனது ஏங்குகிறது என் உயிரே ...

என் அழகான மனைவிக்கு அவளின் சின்ன சின்ன ஆசைகளை கிட்டவே இருந்து நிறைவேற்ற ஆசை .....அவளின் உணர்வுகளுக்கு மரியாதை செய்ய ஆசை ...

மனம் கோணாமல் நடந்துகொள்ள ஆசை ......எவ்வளவு ஆசை...எத்தனை ஏக்கங்கள் ....அத்தனையும் உனக்காக செய்யவே ஆசை...

நான் நினைத்தது எல்லாம் அரைகுறையாய் நடந்தது .......உன்னை மட்டும் முழுதாக என்னிடம் வைத்துக்கொள்ள ஆசை என்னுயிரே .......

என்கைப்பிடித்து உன்னுடன் அழைத்துக்கொள் ......உனக்குள்ளே அணைத்துக்கொள்....

உன்வாசதிற்காக ஏங்குகிறது என் இதயம்.....

Friday, April 24, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 10

உன்னிடம் நான் கொண்டிருப்பது எது ? காதலா! இல்லை என் உயிரை இந்த காதல் என்ற வட்டத்தில் அடைத்துவைக்க எனக்கு விருப்பம் இல்லை .....

எல்லாவற்றையும் தாண்டி ......எல்லைகளைக்கடந்து நீ இருந்ததால் தான் நான் உன்னிடம் வந்தேன்

அவ்வாறென்றால் இது அன்பா, பாசமா, பிரேமையா எதுவென்று நான் சொல்வது ?

இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு இனம் புரியாத உணர்வு இது...

உன் ஒவ்வொரு உணர்வுகளையும் நேசிக்கிறேன் ....

உன் சின்ன சின்ன ஆசைகளையும் நேசிக்கிறேன் .....

உன் சின்ன சின்ன வருத்தங்களையும் நேசிக்கிறேன் ......

நீ நேசிப்பதை நான் நேசிக்கிறேன் .....

நீ சுவாசிப்பதை நான் நேசிக்கிறேன் .....

மொத்தமாய் உன்னை என்னில் அடக்கிக்கொள்ள விரும்புகிறேன் .......

நான் என்பது நீதானே என் உயிரே .....

Thursday, April 23, 2009

என் உயிருக்கும் ஓர் கடிதம் - 9

உன்னை என்னிடம் சேர்த்ததற்காக அந்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.....நானும் உன்னிடம் வந்ததற்காக கொஞ்சமே கொஞ்சம் புண்ணியம் செய்திருக்கிறேன் .....அதனால்தான் உன் தோளில் சாய்ந்திருக்கிறேன்......நிம்மதியாய்

இனியும் உனக்காகவே அந்த கடவுளிடம் வேண்ட ஆசை.....உனக்கு நிம்மதியான வாழ்க்கையை கொடு என்றுதான் வேண்டுகிறேன்....

புன்னகைப்பூவாய் என்றும் நீ இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.....

நீ சந்திக்கும் ஒவ்வொரு நெருக்கடிகளில் இருந்தும் இறைவன் உன்னை காப்பற்றட்டும் ...

நான் உனக்காகவே என்னை தேய்த்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் ....

ஏதோ என்னால் முடிந்தது உனக்கு கொடுக்கவே ஆசைப்படுகிறேன் நீ வேண்டுபவை நிம்மதியாக இருந்தாலும் ......

என்னைப்பற்றி நீ கவலைகொள்ள தேவை இல்லை.....என் வாழ்க்கைப்பயணம் உன்னை நோக்கியே இருக்கும் இருக்கணும்.....அதைத்தான் நானும் வேண்டுகிறேன் .....

அந்திமக்காலத்தில் உன் மடியில் தலை சாயவே விருப்பம்...கண்மூடி தூங்கவேண்டும் மீளாமல் உன்சுகத்துடனேயே சென்றுவிடுகிறேன் ......

எனக்கான இடம் நீதான் என்று நிர்ணயிக்கப்பட்டது இவ்வுலகில்....முடிந்தவரை உன்னை திருப்திப்படுத்தவே ஆசை .....

நீ கண்ணீர் சிந்தாமல் இருக்கவேண்டும் இனியேனும் ......பயம் கொள்ளாமல் இருக்கவேண்டும் இனிமேலும்....

சமுதாயப்பர்வைகளில் நான் உயிரோட்டமாக உனக்கிருக்க விரும்புகிறேன் ....

உனக்கான என் பங்களிப்பு நிச்சயம் நிறைவேறும் நிறைவேற்றிவிட்டுத்தான் செல்வேன்....

நீ எதைக்கேட்டாலும் என்னால் தரமுடியும் உயிர் வேண்டும் என்றாலும் ......

எனக்குத்தேவை நீ எப்போதும் என்பார்வையில் படும்படி நடந்துகொள்ளவேண்டும் ....

அது ஒன்றே போதும் எனக்கு..

நல்லவையோ கெட்டவையோ மனம்திறந்து சொல்லவேண்டும் என்பதே என் ஆசை....

இதோ நீ செல்கிறாய் அடுத்தவாரம் .....ஒருநாள் விடுமுறையாக ......எப்படி அந்த ஒருநாளை எதிர்கொள்ளப்போகிறேன் என்றுதான் தெரியவில்லை ........

நீ இல்லாத இடம் எனக்கு வெற்றிடமாகத் தெரிகிறது .......ஒரே சூன்யமாய் .....

வேறொன்றையும் ரசிக்கத்தோன்றவில்லை உன்னைத்தவிர ........

Monday, April 20, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 8

கொஞ்சம் உன்மடியில் படுத்துக்கொள்கிறேன்
எனக்குத்தேவை உன் ஆறுதல் கண்ணம்மா....
எங்கே உன்மடிக்குள் அடைக்கலமாகும் என்னை ஏந்திக்கொள்ள மாட்டாயா
என் உயிரே....
நானும் கொஞ்சம் அழுதுவிட்டுப்போகிறேனே உனக்காக
நீ அழும்போது நானும் கொஞ்சம் அழுதுவிட்டுப்போகிறேனே .....
நீ அழுந்தும்போது நான் மட்டும் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும் ......
உன் நினைவலைகளில் என்றும் நான் இருக்கும்போது ஆறுதல் சொல்லவும் உன்னைத்தேற்றவும் வழி இல்லாமல் நிர்கதியாய் நான் நிற்கும் போது மனது அழுகிறது என்னையும் அறியாமல் ......
என்னிடம் என் இடம் வந்து விடு உனக்கான மருந்தாய் நான் இருக்கிறேன்...
என்னிடம் வந்துவிடு நீ இழந்ததை எல்லாம் கொடுக்கிறேன்....
என்னிடம் வந்துவிடு.....எல்லாமுமாய் நான் இருக்கிறேன் என் உயிரே....
குட்நைட் என்று மட்டும் சொல்லு .....குட்பை சொல்லாதே என் கண்ணே மனது கொஞ்சம் ஆடிப்போகிறது .......
நானும் அழுதுகொண்டுதான் இருக்கிறேன் ..........
நான் இழந்த என் இளமையை எல்லாவற்றையும் அந்த இறைவன் கொடுப்பார் என்றால் இன்னொருமுறை உனக்காக வாழவே விருப்பம் உயிரே...
உன் கைகளால் என்னை கொஞ்சம் அணைத்துக்கொள்....அள்ளிக்கொள்




Thursday, April 16, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 7

ஒவ்வொருமுறையும் நான் உன்னிடம் தோற்றுத்தான் போகிறேன் ......என்னைப்புரியவைக்க முயற்சி செய்து அதில் அப்பட்டமான எனக்கே தெரியாமல் சில கொடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதால் உன்மனம் புண்ணாகி போகிறது அதற்காக மனம் வருந்துகிறேன்.....

எனக்கான யோசனைகள் எல்லாம் உன்னைச் சுற்றியே வந்திருக்கிறது இதை பல தருணங்களில் உனக்கும் தெரியப்படுத்தி இருக்கிறேன் ஆனாலும்கூட நீ இன்னமும் என்னை தவறாகத்தான் எண்ணி இருக்கிறாய்...

தொலைவது என்பது உனக்கும் எனக்கும் புதிதல்ல நானும் தொலைந்துதான் போனேன் உன்னிடம்...அதேபோல் நீயும் தொலைந்துதான் போனாய்....என்னிடம்

இதில் நானோ நீயோ மாற்றுக்கருத்து கூறவில்லை......அதில் எந்த மாற்றமும் இல்லை.......

இருந்தாலும் நம் இருவருக்கும் நெருடல்கள் நேரிடுகிறது ஏன் என்றுதான் தெரியவில்லை....

கோபத்தில் பரிமாறிக்கொள்ளும் வார்த்தைகளுக்கு நீ காயப்பட்டு போகிறாய் ......

நானும் தெரியாமல் காயப்படுத்தி விடுகிறேன்...

இருக்கட்டும் இத்துடன் முடியட்டும் இந்த கோப பரிமாற்றங்கள்.....இன்றுமுதல் என்னை புது மனிதனாகப் பார்ப்பாய்.......

Wednesday, April 15, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 6

எவ்வளவுதான் சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாத உன்னை என்னவென்று சொல்லுவது.....

நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு உள்ளர்த்தம் இருக்கும்போது நான் சொல்லியவைகளில் பாதியாவது இருக்காதா கொஞ்சம் யோசித்துப்பார் உனக்கே புரியும்....

உனக்கான உரிமைகளுக்கு நான் மதிப்பு கொடுக்கும் போது நீ ஏன் நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ளர்த்தம் கற்பிக்கிறாய்

நம்பிக்கை இல்லாமல் உன்னை சாடவில்லை .....உன்மேல் இருக்கும் நம்பிக்கைதான் என்னை உன்னிடம் ஈர்த்துக்கொண்டு கிட்டத்தில் வைக்க முயற்சி செய்கிறது ......அதற்குத்தான் நான் ஆசையும் படுகிறேன்....

அதனால்தான் இவ்வளவு கேள்விகள்.....கேட்டுக்கொண்டு பதிலை நீ தருவாய் என்று எதிர்பார்க்கிறேன் .....

ஆனால் என் எதிர்பார்ப்புக்கெல்லாம் உன் பதில் என்ன சொல்லியது என்று கேட்டால் குழப்பமான நிலைதான் இன்று வரை நீடிக்கிறது ......

நேரிடையான பதில் எப்போதுதான் தருவாய் .....

உன் தவிப்பும் குழப்பமும் புரிகிறது....அது என்மேல் எழும் நம்பிக்கையின்மையா ....அல்லது சந்தேகப்படுகிறாயா.....

உன் சந்தேகம் நியாயமானதுதான் ஆனால் உன்னையே நம்பி....எல்லாமுமே நீயாகி இருக்கிறாய் என்று என் மனதை திறந்து காட்டியும் உன் சந்தேகம் நிவர்த்தி ஆகவில்லையென்றால் நான் அதற்க்கு என்ன செய்ய முடியும் .....

காலத்தின் கைகளில் அதற்கான பதிலை விட்டு விடுகிறேன் ......இதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை ......சொல்லவும் தோணவில்லை ........

Tuesday, April 14, 2009

நண்பன் ரவிக்கு ஓர் கடிதம்

சென்ற வருடம் இந்நேரம்

நீ உயிருடன் இருந்தாய்.....

பார்க்க முடியாமல் போகட்டும் என்றே

என்னை விட்டு வெகுதூரம் பறந்தாய்...!

உனக்கான கடமையை மறந்து

எதற்காகவும் பந்தப்படாமல்

எங்களின் நினைவுகளைச் சுமந்து

நாங்கள் எளிதில் வரமுடியா இடத்திற்கு

நீ சென்றது ஏனோ என் நண்பனே !

நிரந்தர இடம் இதுவல்ல அதுவென்றே

தோன்றியதோ உனக்கு.....!

இல்லை உன்னைத்தாங்கத்தான் இந்த பூமி

தாய்க்கு மனமில்லாமல் தன் மடியில் உறங்க

வைத்தாளோ என் நண்பனே !

நிரந்தர உறக்கம் எங்களுக்கும் உண்டு

அதற்கு முன்னாள்

அனுபவிக்கும் செயல்கள் ஆயிரம் உண்டு

எங்களுக்குப் பின்னே வரும் சந்ததி நீ

எங்களுக்கு முன்னே பறந்து ஏனோ !

இதுதான் விதியின் சதியோ என் நண்பனே !

உன் உயிர் காக்க வழியில்லாமல்

உன் முகம் பார்க்க முடியாமல்

உன் நினைவுகளைச் சுமந்தே செல்கிறது

எங்களின் பயணம்...

முடியும் தருணத்தில் நானும் உனக்கு

அலை பேசுகிறேன்

உன்னோடு வந்து சேர்ந்து கொள்கிறேன்

அதுவரை எனக்கான இடத்தை

காத்திரு என்னை எதிர்பார்த்திரு!

Saturday, April 11, 2009

நெருப்பு

எத்தனை நாள் ஆகிவிட்டது உன்னைப்பார்த்து .....வெறும் பார்வைகளாலேயே பேசிக்கொண்டு....நெருங்கவும் முடியாமல், பேசவும் முடியாமல் என்ன கொடுமை இது....
என்னக்கான உரிமையைத்தானா பக்கத்தில் இருந்தும் அனுபவிக்க முடியாமல் போகிறது...
இதற்க்காகவா நான் உருகினேன்.....உன்னை என்னவளாக ஏற்றுக்கொண்டேன் .....கேட்டால் எல்லாம் உங்களுக்குத்தான் என்று சமாதானம் சொல்கிறாய் என் நிலை அறியாமல்....
உனக்கு புரியவில்லையா என் வேதனை...உள்ளுக்குள் எரிக்கும் நெருப்பு...என் நெருப்பு மூச்சு....
புரிந்தும் புரியாமல் இருக்கின்றாயா என்றுதான் எனக்கு தெரியவில்லை...
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் என் நெருப்பு மூச்சே என்னை சுட்டெரித்துவிடும் ..கொன்றுவிடும்...
இந்த அவஸ்தையும் கொடுமையும் அனுபவிக்க என்னால் முடியவில்லை அதற்க்கு கொஞ்சம் விஷத்தை கொடுத்து என்னை கொன்றுவிடு உன் கைகளால் அந்த திருப்தியாவது எனக்கு கிடைக்கட்டும்....
நானும் அந்த நிலையில்தான் இருக்கிறேன் என்று சொல்கிறாய்...ஆனால் என் முடிவு .....சொல் !

Thursday, April 9, 2009

புலம்பல்

நான் மனம் விட்டுச் சிரித்தே வெகுநாளாகிறது .....இயந்தரத்தனமாய் எல்லாம் இருக்கிறது.....

காலையில் எழுந்து காலை கடன்களை செய்து ஒரேமாதிரி செய்து செய்து இதுதான் செய்கிறோம் என்றே தோன்றாமல் வாழ்க்கை போய்கொண்டிருக்கிறது ....

நாட்கள்தான் நகர்கின்றனவே ஒழிய திருப்தி என்பதே என்னவென்று தெரியாமல் போய்கொண்டிருக்கிறது வாழ்க்கை அதோடு ஆயுளும் ........

நிறைந்த வாழ்வு எங்கிருக்கிறது .....தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது ஆனால் ஒரு முடிவு தெரிந்த பாடில்லை ....

எங்கே பாதை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் .....இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது ......எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் ......கவி கண்ணதாசனுடையவை

உண்மைதான் பயணம் எங்கே என்று தெரிந்து விட்டால் கடவுளை நம்பமாடோம் ...தான்தோன்றித்தனமாக போய்விடும்....அதனால்தான் எல்லாமே மறைபொருள் ரகசியமக்கப்பட்டதோ.....

மனம் மயங்குகிறது .....எதைநோக்கித்தான் என் பயணம் ...இல்லாத ஒன்றை இருக்கிறது என்று நம்பி போகிறேனோ .....

தேடு..என்பது எனக்கிடப்பட்ட கட்டளை ....நான் எதை நோக்கி தேடிக்கொண்டிருக்கிறேன் .....

இலக்கிலாத அம்பு போலே போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கின்றேன் ....ஆனால் எங்கே அமைதி எங்கே நிம்மதி...

நெஞ்சுக்கு நிம்மதி அது ஆண்டவன் சந்நிதி .....சொல்லிவிட்டார்கள் ஆனால் மனம் அதில் ஒன்றமாட்டேன் என்கிறதே ஏன் ஏன்?

கேள்விகள்தான் எத்தனை எத்தனை ஆனால் பதில் எங்கே.....

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும் கொட்டிவைத்த குப்பையாக வந்த உடம்பு ......அதற்கு குப்பன் சுப்பன் என்று பெயர் ......

பந்த பாச சேற்றில் வந்த இந்த தேகம் எந்த கங்கை ஆற்றில் கழுவினால் போகும் ....தெரியவில்லை ..

அடிபணிதல் வாழ்க்கையா ......இல்லை ஆர்பரிப்பதுதான் வாழ்க்கை .....சிறகை வெட்டாமல் உயர பறப்பதுதான் வாழ்க்கை ......

மனது குழம்புகிறது......இத்தனை நாளாக தெளிவில்லாமல் என் வாழ்வு சென்றதா .......தெளிவு எது ?

குப்பை மனது மீண்டும் மீண்டும் குப்பையை தேடுகிறது ....கிடைக்கவில்லையென்றால் அழுகிறது ......

அப்படி என்றால் வாழ்வதற்கான ஆதாரம் எது ?

மனம் மறுபடியும் பந்தப்படுகிறது .......உன்னைத்தான் நம்பி இருக்கிறேன் .....சாத்தியம் என்றே தோன்றுகிறது .......

Tuesday, April 7, 2009

குயிலின் குரல்

இது குயிலின் குரல்....ஒன்றாக கூவித்திரிந்த ஒரு பறவையின் குரல்...காத்திருந்தது காத்திருந்து கண்கள் பூத்த ஒரு குயிலின் கண்ணீர் குரல் ....
தேடிவந்த இடம் இதுதானென்று அறியாமல் தனக்கென ஒரு இடத்தைத் தேடித் தேடிக் களைத்தஒரு குயிலின் குரல்...
காத்திருந்த காதலுக்காக சுயநலமில்லாமல் தன்னை கொடுத்த குயிலின் குரல்....
தன்னிடம் இருந்ததை எல்லாம் தனக்கென வைத்துக்கொள்ளாமல் உனக்கென கொடுத்த குயிலின் குரல்..
பறிகொடுத்த நெஞ்சை எங்கேனும் கிடைக்காதா என்று தேடித்திரியும் குயிலின் குரல்..
எங்கேனும் அந்த குயிலை நீங்கள் கண்டாலும் அந்த குயிலின் கதையை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள் .....
எங்கேனும் ஒரு ஒடிந்த மரக்கிளையில் அது மட்டும் தனியாக அமர்ந்து தன் காதல் கீதத்தை இசைத்தபடி இருக்கும் ....
அந்த குயிலின் சோக கீதம் பிடித்தாலும் பிடிக்கவிடாலும் அதன் ராகத்தை இடையூறு செய்யாமல் ஒதுங்கி செல்லுங்கள்...
முடிந்தவரை மனிதர்கள் இல்லா இடத்தில்தான் அது பாடிக்கொண்டிருக்கும் தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும் ........
ஆற்றுப்படுத்த யாரும் இல்லா விட்டாலும் ஆறுதலை அது தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் ....
காயப்பட்ட நெஞ்சங்களை தான் காயப்பட்டு அது தன் மதுர கீதத்தால் ஆற்றிக்கொண்டிருக்கும் ....
கொஞ்சம் நின்றுதான் கேட்டுசெல்லுங்கள் அதன் கதையை .....
எல்லோரையும் போலவே அதற்கும் வந்ததுதான் காதல்...தனக்கென எண்ணாமல் உனக்கென எண்ணும் மனதுதான் அதற்கும் .....
கொஞ்சம் அதன் பாட்டை நீங்கள் உற்றுக்கேட்டால் தெரியும் அதன் பிரேமையை ...
காதலின் ஆழத்தில் தன்னை நுழைத்துக்கொண்ட அந்த குயில் தன் சக துணையைதேடித்தான் காத்துக்கொண்டிருகிறது ....
வந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் மரத்திற்கு மரம் அது தன் கீதத்தை இசைத்துக்கொண்டிருகிறது....
கொஞ்சம் நீங்களும்தான் கேட்டுப்பாருங்களேன் .......

கடிதம்

வாழ்நாளின் இந்த பிறவியை முடிந்த வரை முடித்துக் கொள்ளவே விருப்பம்...நான் விரும்பியோ விரும்பாமலோ என்னை இந்த ஜென்மம் என்னை துரத்திக்கொண்டிருக்கிறது சூறாவளியாய் ......இன்னும் எத்தனை கஷ்டங்களோ எத்தனை தடுமாற்றங்களோ தெரியவில்லை ......

தடுக்கி விழுந்தவைகள் ஏராளம் ......அன்பு காட்டி என்னை வஞ்சித்த உள்ளங்கள் வாழ்க வளர்க ....அவர்களாவது அவர்களின் எண்ணத்தில் திருப்தி அடையட்டும்....

திருப்தி எதில் வருகிறது ....ஒரு சிலருக்கு செய்வதில் ஒரு சிலருக்கு உபத்திரவம் செய்வதில் .....ஒரு சிலருக்கு நம்ப வைத்து கெடுப்பதில்....இதுமாதிரி ஏராளம்...

இதில் நான் எந்த ரகம் தெரியவில்லை.....நான் அது பற்றி யோசிப்பதுமில்லை ....என்னுடைய கடமையைச் செய்கிறேன் செய்து கொண்டே போகிறேன்....எதுவரைக்கும் தெரியவில்லை .....ஆனால் இந்த உலகத்திற்க்கு என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கும்....

அதற்கான சக்தியை இறைவா எனக்கு கொடு என்று அனுதினமும் வேண்டிக்கொள்கிறேன் .....நீண்ட ஆயுளை கொடுத்து என்னை சுயநலம் மிகுந்தவனாக மாற்றிவிடாதே என்றுதான் வேண்டுகிறேன் .......

மாறுபட்ட அணுகுமுறைகளின் வெளிப்பாடு என்னைக்கொஞ்சம் புரட்டிப்போடுகிறது.....இருந்தாலும் சமாளித்துக்கொள்கிறேன் ...

ஆனால் வஞ்சனை செய்பவரைக்கண்டாலே என்னை அறியாமல் கோபம் வருகிறது ஆனாலும் அனுசரித்தே போகிறேன் முடிந்தவரை ....

அவர்களை ஒதுக்கவேண்டும் ...இல்லையேல் ஒதுங்கவேண்டும் ....நான் ஒதுங்கிக்கொள்கிறேன் ......

அவர்கள் தந்த அதிர்ச்சி என்னை தாக்கி கொண்டே இருக்கிறது ...தாங்கிக்கொள்ள பழகுகிறேன் ......

சுயநலம் எல்லாமே .....ஒன்றின் மேல் ஒன்று சுயநலம் ....எதைக்கொண்டு போகிறார்கள் இவர்கள் .....வாழ்வின் அந்திம காலத்தில் எல்லாம் புரிந்து என்ன பயன் ....இழந்த காலம் திரும்ப வருமா ......

என்னையும் சேர்த்துதான் ஆனால் நான் சற்று நிதானிக்கவே விரும்புகிறேன் .....

உலகின் பார்வைக்கு ஒன்றும் அறியாமல் போகவே விருப்பம்...இறைவன் மனது வைக்கவேண்டும் .....

Thursday, April 2, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 5

என் வாழ்நாளின் பெரும்பகுதியை நான் வீணடித்து விட்டதாகவே தோன்றுகிறது .... என் வாழ்க்கையில் இழந்தவை ஏராளம் ஏராளம்......
இனிமேலும் இழக்க விரும்பவில்லை.....உன் அன்பை, உன் ஸ்பரிசத்தை, உன் காதலை, உன் நெருக்கத்தை....உன்னை முழுதுமாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்.....
என் கை பிடித்து வாழ்நாள் முழுவதும் வலம் வருவாயா என்னவளே! உனக்காக நெஞ்சு நிறைய அன்புடனும், பாசமுடனும், உன்னுடைய பாசத்திருக்குரியவன் காத்துக்கொண்டிருக்கிறான்.....
நான் அமைதியான நீரோடை என்றால் நீ மென்மையான வருடும் தென்றல்!
நான் படரும் கொடி என்றால் நீ தலைகோதும் காற்று!
கொந்தளிப்பில்லா நீரோடையில் மென்மையான தென்றல் வீசினால் நீரோடை நீர் நிலையை வருடும்போது லேசாக சிலிர்த்துக்கொள்ளுமே அதே நிலையை நான் உணர்கிறேன்....உன் பெயரைச் சொல்லும்போதெல்லாம் , உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ......
நிலவின் குளுமையாய் உன்னை அள்ளிக்கொள்ளும் அதேநேரம் உன்னிடத்தில் தீயின் வெப்பத்தையும் உணர்ந்திருக்கிறேன் ..வழி தவறும் ஆடாய் நான் இருந்த போது .....
இருந்தாலும் என்னை ஏற்றுக்கொள்ள என்றுமே நீ தயங்கியது இல்லை ...அது நான் பெற்ற வரம் .....எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம்....!
அதனால்தான் நீ எனக்கு கிடைத்ததை கொண்டாடுகிறேன் கூத்தாடுகிறேன் ....
சிலநேரம் என்னை அறியாமல் உணர்ச்சிவசபடுகிறேன்.....தவறாக எண்ணாதே என் உயிரே .....









Wednesday, April 1, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 4

வெறும் கனவுகளைக்காட்டி உன்னை ஏமாற்ற விரும்பவில்லை.....அது என் மனமானாலும்,உடலானாலும் ....நினைவுகளைவிட நிகழ்வுகளையே நான் நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்....உனக்காகத்தான்..
அதனாலதான் எந்த பிரச்சனையையும் நான் கூச்சமில்லாமல் அணுகமுடிகிறது
நான் வாழ்ந்த வாழ்க்கை முறை என்னை கட்டிப்போட்டதுதான் ஆனால் என்னால் விசாலமாய் யோசிக்க முடிந்தது உன்னை பார்த்த பின்புதான்....
ஆனாலும் சில வேளைகளில் என்னால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை தாண்டி யோசிக்க முடிவதில்லை....ஆனாலும் மௌனத்தினால் அதை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன்...
இருக்கட்டும் பிரிதொருநாளில் என்னை புரிந்து கொள்வாய் என்றே நினைக்கிறேன்....
என்மேல் நானே வெறுப்புக்கொண்டு வாழ்வைச் சபித்துக்கொண்டிருந்த வேளையில் தென்றலாய் உன்வரவு இருந்தது....
இடையில் உனக்கும் எனக்கும் அடித் புயல்கள் ஏராளம்....ஆனாலும்கூட நம் காதலின் அடித்தளம் அழியவில்லை அதுவே நம் வெற்றி என்றுதான் சொல்லவேண்டும்...

இதயபரிமாற்றங்களை இன்னும் சில வருடங்கள் முன்பே தெரிந்திருந்தால் அப்போதே உன்னைச் சிறைஎடுதிருப்பேன்.....

அதனால்தான் வெளிப்பார்வை பார்க்கும் சமூகத்திற்கு நம் பயபடவேண்டி இருக்கிறது....

உனக்கும் எனக்கும் தெரியும் நம் கலப்பு தூய்மையானது, உண்மையானது என்று...

ஆனாலும் பார்க்கும் பார்வைகள் வேறாகும்போது சமூகத்தின் பார்வைக்கு பயப்பட வேண்டி இருக்கிறது....

நான் இருக்கும் இடத்தில் வேறு யாரோ உன்னுடன் உனக்கு இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது உன்னுடன் அவர்கள் இருக்கும் நிழல்படத்தைக்கூட நான் விரும்பவில்லை உயிரே....

இருக்கட்டும் உன் மனது என்னிடம்தானே இருக்கிறது அதை பத்திரமாய் என் இதயச் சிறையில் வைத்துப் பூட்டிவிடுகிறேன்.....

உன் இதயம் எனக்கு மட்டும்தானே சொந்தம்....




மண முறிவு

உனக்கும் எனக்கும்
முன் பழக்கம்
அதனால்தான் இத்தனை
குழப்பம்....
****
தெளிந்த நீரோடை நம் வாழ்வு
இறைக்கோ அதை ஆட்டிவைக்கும் விளையாட்டு
எனை மாட்டி வைத்து பார்த்தாய் வேடிக்கை
எவ்வளவு தூரம் பயணம் இந்த வாடிக்கை
****
மலரின் மணமெல்லாம் மனதால் நிறையும்
நீயும் நானும் மலரானோம்
வாழ்க்கைத் தோட்டத்தில் மலர்ந்த
பூக்களைப் பறித்து தொடுத்ததில்
சிறு சிக்கல்
நான் நாரா இல்லை நீ மணமா
****
வெளியில் சிரித்து
மனதில் அழுகிறேன்
உனக்கு
மனதில் சிரித்து
வெளியில் அழுகிறாய்
பொருத்தமான வேஷம்
நம் இருவருக்கும்
பொருந்தவில்லை நேசம்.
****
இடைவெளிகள் இருந்தாலும்
உனக்கான கடமையை மறக்கவில்லை
என்றாவது ஒரு நாள் உன்னை உணர்வாய்
உணர்வில் நீ ஒன்றும்போது
நீயும் நானும் வேறாக....
தெரியவில்லை அதைத் தவிர....


ஒருதலைக்காதல்

கண்கட்டி நீ என்னை
தள்ளிவிட்ட போதும்
உன் சுவாசம் என்னை
உன்னிடம் நோக்கி ஈர்த்தது
கைகொட்டிசிரிக்கின்றாய்
அந்த புன்னைமரத்து பூப்போலே
இதழ் கடித்து சிவக்கின்றாய்
இந்த வெண்தாமரை நிழல் போலே
****
நினைவுகள் என்னை
நினைத்தபோதும்
நிகழ்வுகள்
எனக்காக தடுத்தது
என்னிடம் உன்னை பிரித்தது
மரத்தடி நிழலே
சாட்சி
நம் விளையாட்டுக்கெல்லாம்
உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
நான் மரத்தடி நிழலைத் தொடுகிறேன்
உன் சுவாசக்காற்றையே உணர்கிறேன்
****
நினைவிருகிறதா
நீ கொடுத்த கடைசி முத்தம்
என் கைகளில்
நினைவிருகிறதா
நீ சிந்திய அந்த கண்ணீர்த்துளி
பனியாக மாறி
என்முகம் பார்த்தது
நினைவிருக்கிறது நீ
நின்ற புல்லின் மடி
இளம்சூடாய் வருடுவதை
நினைவிருக்கிறது
எனக்காக நீ கொடுத்த
அறையும் கூட !
****
காதலை படிக்க
நான் காதலை பார்க்க வேண்டி வந்தது
அனுபவம் பெற
உன் மங்களமான முகத்தை
ரசிக்க வேண்டி வந்தது
தோல்வி காண
நீ உறவோடு ஒத்துபோனது
எல்லாம் எல்லாமாய்
நான் மட்டும் தனிமையில்
மரத்தடியே
முறிந்த கிளை போலே .......







விரக்தி

நான் போகும் பாதையிலே
நாட்டவைத்த கள்ளிச்செடி!
உச்சந்தலை நோகுதடி !
உள்ளுக்குள்ளே வேகுதடி !
நான் பார்த்த மரமெல்லாம் !
பூப்பூத்து காய்க்கும்போது !
எனக்குன்னு வச்ச மரம் !
வெட்ட மரமா போனதென்ன !
வெக்கையாலே நோவதென்ன !
உன்னசொல்லிக் குத்தமில்ல !
ஊர்வம்பு குத்துதடி!
காஞ்ச மறந்தான் எப்போதுமே !
கல்லடி படுமடி
கண்ணான கண்ணு இது
என் கண்ணுக்குள்ளே பொத்திவச்சேன்
காஞ்ச முள்ளை ஊசியாக்கி
குத்திப்புட்டு போனதென்ன
என் உள்ளமெல்லாம் நோவதென்ன!






Tuesday, March 31, 2009

வாழ்த்து மடல்

உன் உறவுடனான
உணர்வுப் பரிமாறல்கள்
முடிந்தவுடன்
இதையும் கொஞ்சம் படி
என் நண்பனே
****
இந்த பூவும் விற்பனைக்கல்ல
வாசம் வீசும் பூக்களில்
இது வாழுகின்ற பூ
சாதாரண பூ
****
நினைவுகளின் அலையில்
உன் நிலைத்த உறவோடு
கைகோர்த்து நீண்டதொரு பயணம்
செய்யும் என் நண்பனே !
இதையும் கொஞ்சம் படி !
****
நிமிர்ந்து நில் !
நேர்கொண்டு அழை !
பணிவோடு பேசு !
பண்போடு பழகு !
நிலைத்திருக்கும்
உன் வாழ்க்கை !
****

என் உயிருக்கு ஓர் கடிதம் - 3

நான் சொல்லும் காரணங்களை நீ எடுத்துக்கொள்ளும் விதத்தில் மாறுபடும் போது உன்மனம் படும் பாடு பார்த்து என்மனம் அழுதுகொண்டே இருக்கிறது ......

புரியாமை ஒருபுறம் இருக்க....என்ன காரணத்தினாலோ நீ படும் வேதனை என்னை சற்றேனும் யோசிக்க வைத்ததுண்டு.....

கவலைபடாமல் உன்னை கவலைப்படவைக்கிறேனே என்றுதான் என்மனம் கவலைப்படுகிறது......

இருந்தாலும் எனக்கான ஆற்றாமை எதன் மூலம் வெளிப்படும் என்றே தெயரியாமல் உன்னை குத்திக்கிழித்துக்கொண்டிருகிறேன்.....

வெளிப்பார்வைக்குத் தெரியாமல் உள்ளுக்குள் உன்னை நினைத்தே உருகிக்கொண்டிருகிறேன் ....

இனியேனும் என்னை மாற்றிக் கொள்ள முயல்கிறேன் .......உன் நினைப்பை தவிர்த்து...

கவிதையாய் பார்த்து கவிதையாய் சிரித்து கவிதையாலேயே உன்னை காயப்படுத்துகிறேன்....

இருக்கட்டும் உன்புன்னகை பார்த்து என்னை நானே ஆற்றிக்கொள்கிறேன் .....புரியாத நிமிடங்களுக்காக நான் வெட்கப்படுகிறேன்...

இனிமேலும் என் மனதால் உன் மனது கிழியாமல் பார்த்துக்கொள்கிறேன்....

பயமின்றி நீ என் பக்கம் வரலாம்

என்னைப்பார்த்து உன் மனதைத்திறந்து காட்டலாம் ....

கொஞ்சம் அழுகாமல் என்னைப்பார்த்துச் சிரித்துவிட்டுப்போ !

உன்கவலை மறந்து....

உனக்கான கவலைகளை பட்டியல் இட்டு என்மனதிடம் ஒப்புவித்துவிடு பார்த்துக்கொள்கிறேன் நானா அதுவா என்று !

என்னோடவே போகட்டும் உன் கவலைகள்

இனி உன் வாழ்நாளெல்லாம் வசந்தமே வீசட்டும்....என் உயிர் காற்றாய்.....

என் உயிருக்கு ஓர் கடிதம் - 2

என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் என்பக்கம் வரவேமாட்டேன் என்று மனதாலும் உடலாலும் உன்னையே தியானிக்கும் என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிடாய் ?

அலைமோதும் என் எண்ணங்களின் பிரதிபலிப்பு உனக்கு தெரிகிறதா.....உயிரின் ஓசையாய்....

உனக்கான உணர்வு கொந்தளிப்பாய் என்மனம் உன்பின்னே சுற்றுவது உனக்கு தெரியவில்லையா?

நீ எது சொன்னாலும் எனக்கான இடத்தையே நிச்சயித்து என் மனம் எண்ணிப்பார்கிறது

நீ எதை நினைத்தாலும் என்னையே நினைக்கவேண்டும் என என் மனம் விரும்புகிறது...

உன்னிடம் நான் எதிர்பார்பது உன் காதல் ஒன்றேதான் !

அதுவன்றி ஓரணுவும் என்னில் அசையாது!

அதுவுமில்லாமல் நான் இருந்துதான் என்ன பயன் ?

என் உயிருக்கு ஓர் கடிதம் - 1

நிச்சயமில்லாமல் இருக்கிறது எல்லாமுமே..... உன்னை நான் தேடுவதும் என்னை நீ தேடுவதும் நிச்சயம் என்றானபோது.... நீ எதை தேடுகிறாய் என்றுதான் எனக்கு தெரியவில்லை

இருக்கட்டும் ஒருநாள் இல்லை ஓர்நாள் நீ நிச்சயம் புரிந்துகொள்வாய் நீ தேடும் பொருள் என்னவென்று.....

அதுவரைக்கும் என் உயிர்காற்றாய் உன் பெயரை.... என் மனமும் உதடும் உச்சரித்துக்கொண்டே இருக்கும்

புரிந்துகொள்ளல் வேறுபடும்போது உனக்கும் எனக்கும் சில இடறல்கள் ஏற்படுவது இயற்கைதான்....

அதைப்பற்றி நான் வருந்துவேன் என்று நீ வருந்தவேண்டாம்...

உனக்கான இடம் என்னிடத்தில் அப்படியே இருக்கிறது ......

இருந்தாலும் காலமும் என் காதலும் உனக்கு புரியவைக்கும் நிச்சயமாய்.....

புரிந்துகொள்ளும் திறன் உன்னிடத்தில் இருக்கிறதா என் உயிரே....!



Monday, March 30, 2009

கட்டளை

கூடியவரை நானும்கூட

கட்டிப்போடுகிறேன் என் மனதை

உன்னைத்தவிர்த்து

மற்றொன்றை நினையாமல்

இருப்பதற்கு

தவிப்பு

பாராமல் பார்த்துக்கொல்கிறாய்
என் மனதை உன் விழியால்
பரிமாறும் வழி தெரியாமல்
தடுமாறுகிறதே என் மனம்
கொஞ்சமேனும் உன் புன்னகை பூக்களை
எனக்காக வீசிவிட்டுப்போ
அப்பொழுதாவது ஆறுகிறதா பார்ப்போம்
என் மனது !

வேதனை

உனக்கான இடத்தைக்கூட
என்னால் தொட்டு பார்க்க முடியாதபோது
எதைப்பார்த்து பரிமாறிக்கொள்வோம் நம்
காதலை
மனமே நீயே சொல் !
*****
தினமும் உனது கைபேசி அழைப்பை
எதிர்பார்த்து பூத்துபோகிறது என் மனம்
எதிர்பாரா தருணங்களில் அலறும் என் கைபேசி
உனது அழைபென்றே தெரியாமல்
அமைதி ஆகிறதே !
ஆறாத என் மனதை
அறியுமா உன் மனம் !
*****
என்று வரும் விடிவு காலம்
என்று வியர்வை தருணங்களில்
விழித்திருக்கும் என் மனதை
அறியுமா உன் மனம் !
*****
இதுவென்றே தெரியாமல் ஓடும்
நாட்களை நாட்காட்டிதான்
தெரியபடுத்துகிறது
தெரிந்து கொள்ளுமா உன் மனம் !
சொல் என் மனமே !
*****


I AM NOT TELLING YOU ANY WORD

I am not telling you any word
but you are always smiling at me
at what extent shall I gasp that smile
if there is nothing between you and me
but something beyond your thought
a warmth touch of mine will be your heart!
yes
i am not telling you any word!

Saturday, March 28, 2009

Between the

END OF LOVE

Could you hear a story that tells the truth?
Of my life and of my love
Between the customs and freedom
On could feel that it is naughty
But could understand the pain
Of my heart
****
Like others, like other beings
My birth is not significant
But is a curse to the world
But is a worst in this universe!
But it is tangled with love and prosperity with
My parents’ wealthy
****
In my growth
There is nothing significant
Unlike others
I have a thought to transcend this world
With out any efforts
With my soared feet!
****
There is nothing to advise me
I have poured the sand on myself
But the love and tranquility waived away
My grief!
But nothing in my life
I have searched the calmness with blinded eyes!
****
Where is calm and where freeness is!
I have tried to touch the chord of piano
But it sings the plot of requiem
Drop by drop of tears from my eyes
The lashes of my grief
And the moan of my moan
Are dumping my mouth without words!
But it is going on it is going on!
My life is going on with out success!
**** (Contd..2)
Page 2




In between the life and death
She comes like a wind
Makes me full of wound
I couldn’t tackle the life after death
But could feel with life with death
Every word she utter
Every moment with me
Shading me out of focus
And couldn’t tackle the life after death
But could feel the life with death!
****
What can I do? And what can I do?
I have loosed the paradise with her
And accept the nectar of hell
Every word she utter
Every moment with me
Shading me out of focus!
Out of Life!
****
The inspiration of my thought
Comes from you and your presence
But all are vain

A LETTER TO MY HEART

Why it happens like that
I am struggling for my authority with you
Could you explain the position of my heart?
Whether it is brimmed with love or lust!
No words from your end
My mind has killed my heart and myself
Could you hear the moans of my heart?
* * * *
I am explaining myself with open mind
And expecting you as like that above
But you are lying to be evasive
When answering my questions
Questions
All are questions
My love is also questions and answers!
Between the betrayal and faithfulness
* * * *
Oh my love oh my love
Could you hear my vow?
Yes the reliable heart may have the
Doubts of faithfulness
Yes or no your answers are always
Synonymous!
* * * *
How can I judge your presentation?
With the brim of doubt and edge of truth
Between the petals of a flower
Shining when seeing the sunrise!
But my heart always in dusk
When thinking of your heart!
* * * *
Oh my pure of purity
Oh my loveable heart
Awaiting for your treat
Between your hugging
And kissing
I am ready to
Solve my life with your loveable touch!

WITHOUT WORDS

The pierce of your eyes
May hurt my heart slightly
To find out of what I thought
But getting confusion
You came to conclusion
With the console of your heart
With out words!

MY NEIGHBOR

I and He are the neighbors for long year
And decided to mend a wall between him and me
I am always in the name of god
He also…..
But both we are hesitating to start
Because of the boughs of my tree
Shut the door of his window
Also his tree bends its boughs to my window
Both are alike
And expect that who could start to mend the wall
So at last!
Both we came to conclusion
To share the expenses of mending wall
I slightly smiles at him
And thought that
What does he do that the roots of my tree under the soil!

TRANQUILITY

From the dawn to dusk
From the birth to death
From the dew to dry
All are examples of life efforts!
In between the second
The happenings may vary
But the timings are the same
Before the stage of life!

* * * *
One could feel the warmth of nature
And one could feel the warmth of mother
Both are the same when hearing the
Sweet lullaby from the breeze!
The chording of a piano
Plays an opera when closing the eyes!
Yes
Could you ever hear the music of calmness!

* * * *
Have you seen the blowing of a flower?
When seeing the rays of the sun
Have you seen the fragrances of a flower?
While spreading through the butterflies
Have you heard the music of breeze?
While your eyes being closed for long sleep
All are anonymous
When you are wasting the nature
* * * *
Life after death
Life after birth is synonymous
One by one
Might by routine
You couldn’t stop
It is fate of fate
With the life after death
Death after birth
* * * *

ALWAYS THE BIRDS ARE EXAMPLES MY LIFE

Always they birds are examples my life
Up and down and slow and speed
The follow ups for a piece of bread
May lead me to the iron of heart!
With out the judgment before the god
But one day it will be over take
My life to the end of prosecution
And the birds are alike…..
Examples the life….

I DON’T KNOW WHY IT HAPPENS

I don’t know why it is happened
I don’t know why it is changed
I don’t know why it is occurred
I don’t know why it is…..
I know only you the reason of reason!
With out you there is nothing – breathless!

DESIRES

Spirituality towards the next world
Tranquility of the deep nature
Ride with the longing lover
The touch of utmost bound of the sky
First kiss of my love
Ever memorable without any loss of mind!

I DEEMED TO DREAM ABOUT YOU

I deemed to dream about you
With out your permission
With out your consent
I deemed to love you
With out your confirmation
But with your life!

SMILES

Smiles are life
Without sorrows
With the smile you could wipe off
The sorrows
I could feel the life with smile
With out my breath!

COULD YOU FEEL THE WARMTH OF YOUR MOTHER

Could you feel the warmth of your mother?
I would feel after my birth
I would feel after my growth
From my love with a touch of HER hand
Shall you get it FROM YOUR DEARS!

FLOWERS

Flowers are represents my life
To be perfumed
Spreading its fragrances over the air
Like my breathe
Shall you feel it!
It always blooming at the sight of sun
Like I am waking up with your face
It perishes itself in evening
Like me
Whether I would be a phoenix!

THE BUBBLES

The bubbles in the rain
Has ended its life in a second!
But again and again
It births and dies
Like it I would be!

DIVERSION OF ROAD

In between diversions of road
Every thing should be alive
Livings or non livings
Life or death
It is like as like
The same thing no changes
In the destiny of life!

QUESTION TO GOD

I would like to ask a question to the almighty
Whether the creation of mankind determined from
The graves of death! Or love of birth!
Exchanges is smaller than ever
Life or without life
I will be the example of that gentle breeze!

I HAVE SEEN YOUR FACE IN YOUR EYES

I have seen my face in your eyes
Mine and mine only
Could we exchange the views of our position?
But I do not know the whether
Your face had been seen by you in my eyes!.....

LAST RIDE TOGETHER

Shall we make a ride together?
With the thought of our past memories.
I slightly touch your hand with love
You grab mine with a vow!
But all in memories which I could remind
Shall we make a ride together?
Who knows but the world may end tonight….?
*****
May the world end itself tonight!
But our love leaves a trace of our love
Leave a seed in the mud soil to grow
Leave the fragrance over the gentle breeze!
Whatever it is I gossip your name into the depth
Of my breathe!
Have you heard my voice that spells your name with?
Full of eager and love!
Shall we make a ride together…?
*****
Why you are hesitating to accept my love
Why you are keeping your face with full of sorrow
Wipe off all your sorrows!
I will be your tale that ends with happiness!
I will be your sparrow to carry your sorrows
To resolve to Almighty!
I will be your apple to eat in the Eden Garden!
*****
Shall we make a ride together…?
I like to kiss your lips to drink the honey!
I hug you to feel mine to be ready!
I hang my arms over your body!
I spin your face with full of smooch!
I close my eyes to be eternal
By thinking your love!
If I could be mortal but my
Soul will be immortal to say
Your name!
Shall we make a ride together……at last at least!
*****