Monday, April 20, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 8

கொஞ்சம் உன்மடியில் படுத்துக்கொள்கிறேன்
எனக்குத்தேவை உன் ஆறுதல் கண்ணம்மா....
எங்கே உன்மடிக்குள் அடைக்கலமாகும் என்னை ஏந்திக்கொள்ள மாட்டாயா
என் உயிரே....
நானும் கொஞ்சம் அழுதுவிட்டுப்போகிறேனே உனக்காக
நீ அழும்போது நானும் கொஞ்சம் அழுதுவிட்டுப்போகிறேனே .....
நீ அழுந்தும்போது நான் மட்டும் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும் ......
உன் நினைவலைகளில் என்றும் நான் இருக்கும்போது ஆறுதல் சொல்லவும் உன்னைத்தேற்றவும் வழி இல்லாமல் நிர்கதியாய் நான் நிற்கும் போது மனது அழுகிறது என்னையும் அறியாமல் ......
என்னிடம் என் இடம் வந்து விடு உனக்கான மருந்தாய் நான் இருக்கிறேன்...
என்னிடம் வந்துவிடு நீ இழந்ததை எல்லாம் கொடுக்கிறேன்....
என்னிடம் வந்துவிடு.....எல்லாமுமாய் நான் இருக்கிறேன் என் உயிரே....
குட்நைட் என்று மட்டும் சொல்லு .....குட்பை சொல்லாதே என் கண்ணே மனது கொஞ்சம் ஆடிப்போகிறது .......
நானும் அழுதுகொண்டுதான் இருக்கிறேன் ..........
நான் இழந்த என் இளமையை எல்லாவற்றையும் அந்த இறைவன் கொடுப்பார் என்றால் இன்னொருமுறை உனக்காக வாழவே விருப்பம் உயிரே...
உன் கைகளால் என்னை கொஞ்சம் அணைத்துக்கொள்....அள்ளிக்கொள்




No comments:

Post a Comment