Monday, June 29, 2009

ஏக்கம்

இன்னும் எத்தனை முறைதான்

என்னை தவிக்க விடுவாய்....

உன்னை ஏதோ ஒரு விதத்தில்

நெருங்கிவிட்டேன் என நினைக்கும்போது

எண்ணச் சிதறலாய் ஏதோ ஒன்று

என்னை உன்னிடமிருந்து தள்ளி

வைத்து தவிக்கவிடுகிறதே கண்மணி ....

*****

உன் தாக்கம் என்னில் முழுமையாக

ஆக்கிரமித்துக்கொண்டு

உணர்வோடும், உயிரோடும் எம்மை

பிணைத்துக்கொள்ளும் தருணங்களை

நான் எவ்வாறு பழிகொடுப்பேன் கண்மணி....

******

உனக்கான அலைவரிசை

நான்தான் எனும்போது

இந்த தொலைவரிசை என்னை

ஒன்றும் செய்ய முடியாதுதான்....

இருந்தாலும்...

மனதின் ஓரம் உனக்கான ஈரக்கசிவு

என்னை தடுமாற வைக்கிறதே கண்மணி....

*******

சற்று தாமதமானாலும்

எனக்காக வரவேண்டும் முழுநிலவு

இன்னொருமுறை

அமவாசையானாலும் .....

உன் முகம் பார்த்து நான் விழிமூட.....

*******

கைப்பிடிக்க நானும்

கைகொடுக்க நீயும்

தயாராய் இருக்கும்போது

நமக்கான தருணங்களை

அமைத்துக்கொள்ள இன்னமும்

தாமதமென்ன கண்மணி....

*******

காத்திருக்கும் பூ கூட

காம்புடன் காத்திருக்கும் போது

என்னை மட்டும் வாசமாய் விட்டுவிட்டு

என் சுவாசத்தை எடுத்துக்கொண்டு போவதென்ன

கண்மணி ...

*******

No comments:

Post a Comment