புன்னகையாய் உன் முகம்
மாறும்போது எவ்வளவு
அழகாக இருக்கிறது .....
மொட்டவிழ்ந்த மலர்போல் ....
மலர்ந்த ரோஜா போல் .....
புல்லிதழின் பன்னீர் துளி போல்...
வசீகரமாக இருக்கிறது ....
*****
உன் முகம் பார்த்து சிரிக்கும்
போது உன் கண்களும் ஆயிரம்
கதைகள் சொல்கிறது ......
எனக்கான நிகழ்வுகளை....
என்னில் இருக்கும் உன் இதயத்தை ....
******
உன்னைத் தேடியே என் இதயம்
வருகிறது.....
உன்னை நினைத்தே என் இதயம்
வாழ்கிறது....
உன்னையே என் மனம் நாடுகிறது....
வார்த்தை மாறாமல் உன்
காதலை
என்னிடம் சொல்லிவிடு
******
கனவுகளை கலைக்க
விரும்பவில்லை
உன்னையே அனுதினமும்
நினைத்து....
உன்னையே ஆராதித்து
உன் நிழலாய் என் கண்கள்
பார்க்கையில்
கை தட்டி எழுப்பும்
ஓசைகள் கூட
என்னில் உன் நினைப்பை
மற்ற விரும்புவதில்லை ......
********
நீ கடந்துபோன
கால்தடங்களை எல்லாம்
தொட்டுப்பார்கிறேன்
என் கைகளால்
உன் வெப்பம் உணர்கிறேன்....
என் அருகில் நீ இருப்பதுபோல் ....
*******
No comments:
Post a Comment