வாழ்நாளின் இந்த பிறவியை முடிந்த வரை முடித்துக் கொள்ளவே விருப்பம்...நான் விரும்பியோ விரும்பாமலோ என்னை இந்த ஜென்மம் என்னை துரத்திக்கொண்டிருக்கிறது சூறாவளியாய் ......இன்னும் எத்தனை கஷ்டங்களோ எத்தனை தடுமாற்றங்களோ தெரியவில்லை ......
தடுக்கி விழுந்தவைகள் ஏராளம் ......அன்பு காட்டி என்னை வஞ்சித்த உள்ளங்கள் வாழ்க வளர்க ....அவர்களாவது அவர்களின் எண்ணத்தில் திருப்தி அடையட்டும்....
திருப்தி எதில் வருகிறது ....ஒரு சிலருக்கு செய்வதில் ஒரு சிலருக்கு உபத்திரவம் செய்வதில் .....ஒரு சிலருக்கு நம்ப வைத்து கெடுப்பதில்....இதுமாதிரி ஏராளம்...
இதில் நான் எந்த ரகம் தெரியவில்லை.....நான் அது பற்றி யோசிப்பதுமில்லை ....என்னுடைய கடமையைச் செய்கிறேன் செய்து கொண்டே போகிறேன்....எதுவரைக்கும் தெரியவில்லை .....ஆனால் இந்த உலகத்திற்க்கு என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கும்....
அதற்கான சக்தியை இறைவா எனக்கு கொடு என்று அனுதினமும் வேண்டிக்கொள்கிறேன் .....நீண்ட ஆயுளை கொடுத்து என்னை சுயநலம் மிகுந்தவனாக மாற்றிவிடாதே என்றுதான் வேண்டுகிறேன் .......
மாறுபட்ட அணுகுமுறைகளின் வெளிப்பாடு என்னைக்கொஞ்சம் புரட்டிப்போடுகிறது.....இருந்தாலும் சமாளித்துக்கொள்கிறேன் ...
ஆனால் வஞ்சனை செய்பவரைக்கண்டாலே என்னை அறியாமல் கோபம் வருகிறது ஆனாலும் அனுசரித்தே போகிறேன் முடிந்தவரை ....
அவர்களை ஒதுக்கவேண்டும் ...இல்லையேல் ஒதுங்கவேண்டும் ....நான் ஒதுங்கிக்கொள்கிறேன் ......
அவர்கள் தந்த அதிர்ச்சி என்னை தாக்கி கொண்டே இருக்கிறது ...தாங்கிக்கொள்ள பழகுகிறேன் ......
சுயநலம் எல்லாமே .....ஒன்றின் மேல் ஒன்று சுயநலம் ....எதைக்கொண்டு போகிறார்கள் இவர்கள் .....வாழ்வின் அந்திம காலத்தில் எல்லாம் புரிந்து என்ன பயன் ....இழந்த காலம் திரும்ப வருமா ......
என்னையும் சேர்த்துதான் ஆனால் நான் சற்று நிதானிக்கவே விரும்புகிறேன் .....
உலகின் பார்வைக்கு ஒன்றும் அறியாமல் போகவே விருப்பம்...இறைவன் மனது வைக்கவேண்டும் .....
No comments:
Post a Comment