நிச்சயமில்லாமல் இருக்கிறது எல்லாமுமே..... உன்னை நான் தேடுவதும் என்னை நீ தேடுவதும் நிச்சயம் என்றானபோது.... நீ எதை தேடுகிறாய் என்றுதான் எனக்கு தெரியவில்லை
இருக்கட்டும் ஒருநாள் இல்லை ஓர்நாள் நீ நிச்சயம் புரிந்துகொள்வாய் நீ தேடும் பொருள் என்னவென்று.....
அதுவரைக்கும் என் உயிர்காற்றாய் உன் பெயரை.... என் மனமும் உதடும் உச்சரித்துக்கொண்டே இருக்கும்
புரிந்துகொள்ளல் வேறுபடும்போது உனக்கும் எனக்கும் சில இடறல்கள் ஏற்படுவது இயற்கைதான்....
அதைப்பற்றி நான் வருந்துவேன் என்று நீ வருந்தவேண்டாம்...
உனக்கான இடம் என்னிடத்தில் அப்படியே இருக்கிறது ......
இருந்தாலும் காலமும் என் காதலும் உனக்கு புரியவைக்கும் நிச்சயமாய்.....
புரிந்துகொள்ளும் திறன் உன்னிடத்தில் இருக்கிறதா என் உயிரே....!
No comments:
Post a Comment