Wednesday, April 15, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 6

எவ்வளவுதான் சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாத உன்னை என்னவென்று சொல்லுவது.....

நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு உள்ளர்த்தம் இருக்கும்போது நான் சொல்லியவைகளில் பாதியாவது இருக்காதா கொஞ்சம் யோசித்துப்பார் உனக்கே புரியும்....

உனக்கான உரிமைகளுக்கு நான் மதிப்பு கொடுக்கும் போது நீ ஏன் நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ளர்த்தம் கற்பிக்கிறாய்

நம்பிக்கை இல்லாமல் உன்னை சாடவில்லை .....உன்மேல் இருக்கும் நம்பிக்கைதான் என்னை உன்னிடம் ஈர்த்துக்கொண்டு கிட்டத்தில் வைக்க முயற்சி செய்கிறது ......அதற்குத்தான் நான் ஆசையும் படுகிறேன்....

அதனால்தான் இவ்வளவு கேள்விகள்.....கேட்டுக்கொண்டு பதிலை நீ தருவாய் என்று எதிர்பார்க்கிறேன் .....

ஆனால் என் எதிர்பார்ப்புக்கெல்லாம் உன் பதில் என்ன சொல்லியது என்று கேட்டால் குழப்பமான நிலைதான் இன்று வரை நீடிக்கிறது ......

நேரிடையான பதில் எப்போதுதான் தருவாய் .....

உன் தவிப்பும் குழப்பமும் புரிகிறது....அது என்மேல் எழும் நம்பிக்கையின்மையா ....அல்லது சந்தேகப்படுகிறாயா.....

உன் சந்தேகம் நியாயமானதுதான் ஆனால் உன்னையே நம்பி....எல்லாமுமே நீயாகி இருக்கிறாய் என்று என் மனதை திறந்து காட்டியும் உன் சந்தேகம் நிவர்த்தி ஆகவில்லையென்றால் நான் அதற்க்கு என்ன செய்ய முடியும் .....

காலத்தின் கைகளில் அதற்கான பதிலை விட்டு விடுகிறேன் ......இதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை ......சொல்லவும் தோணவில்லை ........

No comments:

Post a Comment