உனக்காக எல்லாமே நான் தேடி தேடி செய்தாலும் ஏதோ ஒன்று உன்னில் நிறைவாய் இல்லையே எதும்மா.......
உனக்காக நான் எனக்காக நீ என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை எது இடை மறித்தது....
நான் சுயநலம் பார்ப்பவன்தான் உன்னை பொருத்தமட்டில்....ஏனென்றால் என்னில் நீ எற்படுதிவிட்டுசென்ற ஏக்க சுவடுகளின் காயங்கள் இன்னமும் ஆறாத ரணமாய் என்னில் வலிக்கிறது....
தேடும்போது கிடைக்காத ஆறுதல், வேண்டும்போது கிடைக்காத சுகம்,எதிர்பார்க்கும்போது கிடைக்காத உன் அன்பு, நான் தேடும் அன்பை தரமுடியா நிலையில் இருக்கும் உன் வாழ்க்கை...
உனக்கே எதுவென்று தெரியாத நிலை, தேவைகளுக்காக உன்னை பயன்படுதிக்கொள்கிற உன்னைச் சுற்றி சூழ்ந்திருக்கும் கூட்டம்...
உன்னையே எதிர்பார்த்திருந்து காத்திருக்கும் உன் குருதி வழி தொப்புள்கொடி சொந்தம் எல்லாமே.....இதில் எதை நீ எனக்காக தருவாய் என்று தெரியாமலே பார்த்திருக்கும் நான்...
என்னை எவ்விதமாயினும் திருப்திப்படுத்த நீ படும் பாடு....அதனால் உடைந்து விழும் நம் அன்பு சிறகுகள்
நம் இருவருக்கும் ஒன்றையொன்று நம்மை காப்பற்றுவதிலே செலவழித்த நாட்கள் .....ஓடிய மாதங்கள்...
இருந்தாலும் ஏதோ ஒர்விதத்தில் ஏதோ ஓர் இடத்தில கட்டுப்பட்டே இருக்கிறோம் நமக்கே தெரியாமல்....
உன்னில் என் உணர்வை, என் இருப்பை நிறைவாய் உணர்த்தவே நான் விரும்புகிறேன்....அவ்வாறு இருக்கிறேன் என்று நான் உணரும் நேரத்தில் ஏதோ ஒரு விதத்தில் நீ கட்டுப்பட்டு எங்கோ இருளில் மறைந்துவிடுகிறாய் உனக்கெனவே நான் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு....
இதோ தேவையில்லாத விவாதங்கள்...உன்னால் கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்ற விஷயத்தை உன் பெருமைக்காக சொல்லப்போய் உடைந்ததுதான் மிச்சம் நீயும் நானும்...
முதலிலேயே உன்னிடம் சொல்லியும் இருக்கிறேன் உன்னால் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று....ஆனால் நீ கொடுக்கும் இடத்தில் அவைகளுக்கு சாதகமாக உன் இருப்பு போய்விட்டதே என்றுதான் வருந்துகிறேன்...ஆனால் நீயோ.....
எதை வேண்டாம் என்று சொல்கிறேனோ அதைத்தான் உன்னால் தவிர்க்கமுடியாமல் போகிறது...முன்பே நான் சொன்னமாதிரி நீ செய்திருந்தால் அவைகள் உன்னை விட்டு விலகித்தானே செல்லும்....
ஆனாலும் நீ கொடுக்கும் இடத்தையே உத்திரவாதமாக பயன்படுத்திக்கொள்ளும் உரிமை யார் கொடுத்தது...
தாளமுடியாமல் நான் கேட்டால் கோபம் கொள்கிறாய், இல்லை என்னையே சந்தேகப்படுகிறாயா என்று மனதுடைந்து கேட்கிறாய்...
எனக்கான நீ என்னிலிருக்க உன் வழியாகவே சாதித்துக்கொள்ளும் அவைகளுக்கு நீ வேண்டுமானால் வக்காலத்து வாங்கலாம்...நான் ஏன் சும்மா இருக்கவேண்டும் சொல்..
அதற்காக நீ கையில் எடுத்திருக்கும் ஆயுதம் நம் உணர்வுகளை மேலும் மேலும் புண்படுத்துமே தவிர சரி செய்யாது...
நீ நீயாகவே அவைகளை வெல்ல வேண்டும்.....விட்டுகொடுக்காமல் அவைகளுக்கு நீ உணர்த்தவேண்டும் நீ அவ்வாறில்லை என்று....
இல்லையென்றால்....என்ன நடக்கும் என்று உனக்கு தெரிந்துதான் இருக்கும்...
காலத்தே களைகளை களையாவிட்டால் பயிர் செய்து என்ன பயன்....