சந்தோசமாக இருக்கிறது உனக்கான
இடத்தில் நானும் எனக்கான
இடத்தில் நீயும் இருப்பதைப் பார்த்து
சரியான இடத்தில் உட்கார்ந்து இருப்பது
சந்தோசமாக இருக்கிறது.....
*******
உனக்கான நினைவுகளை
பதித்துக்கொண்டு அந்த
மரத்தடி நிழலில்
நிற்கும்போது
கடந்து செல்லும் காற்றை
கொஞ்சம் நிறுத்தி
என் இதழ்களால் உன் பெயரை
உச்சரித்து
தென்றல் வருடும் காற்றாய்
உன்னிடம் அனுப்பினேன் .....
******
வந்திருக்கும் உன்னிடம்
என் சுவாசத்தைச்
சுமந்துகொண்டு...
வந்திருக்கும் உன்னிடம்
என் காதலை
தாங்கிக்கொண்டு....
என்ன பதிலை சொல்லி அனுப்பினாய் ....
கொஞ்சம் வருடும் காற்றில்
என் காதை வைத்து கேட்கிறேன் ......
******
உன்குரல் கேட்கிறது ....
என்ன சொல்கிறாய் என்று கேட்கும்
நிலையில் இல்லை என்மனம்
நான் கேட்டது உன்குரலைத்தான்
அது ஒன்றே எனக்கு போதும் ......
****
மௌனமாய் நீ இருந்தாலும்
மயிலிறகாய் உன் மௌனமொழி
என்னை வருடிவிட்டுத்தான் செல்கிறது
*****
உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
என்னை வாட்டிவிட்டுத்தான்
போகிறது ....
*****
என்ன செய்வது
வாடிய இந்த
பயிருக்கு கொஞ்சம்
ஜீவத்தண்ணீரை
ஊற்றும் வள்ளலாக
நீ
இருக்கமாட்டாயா ....
*****
ஒவ்வொரு முறையும்
தடுமாறித்தான் போகிறேன்
உன்னை பார்க்கும்போதெல்லாம்
உன் கோபத்தருணங்களில் கூட
உன் முகம் பார்த்து
தடுமாறித்தான் போகிறேன்.....
*****
No comments:
Post a Comment