உனக்கும் எனக்கும்
முன் பழக்கம்
அதனால்தான் இத்தனை
குழப்பம்....
****
தெளிந்த நீரோடை நம் வாழ்வு
இறைக்கோ அதை ஆட்டிவைக்கும் விளையாட்டு
எனை மாட்டி வைத்து பார்த்தாய் வேடிக்கை
எவ்வளவு தூரம் பயணம் இந்த வாடிக்கை
****
மலரின் மணமெல்லாம் மனதால் நிறையும்
நீயும் நானும் மலரானோம்
வாழ்க்கைத் தோட்டத்தில் மலர்ந்த
பூக்களைப் பறித்து தொடுத்ததில்
சிறு சிக்கல்
நான் நாரா இல்லை நீ மணமா
****
வெளியில் சிரித்து
மனதில் அழுகிறேன்
உனக்கு
மனதில் சிரித்து
வெளியில் அழுகிறாய்
பொருத்தமான வேஷம்
நம் இருவருக்கும்
பொருந்தவில்லை நேசம்.
****
இடைவெளிகள் இருந்தாலும்
உனக்கான கடமையை மறக்கவில்லை
என்றாவது ஒரு நாள் உன்னை உணர்வாய்
உணர்வில் நீ ஒன்றும்போது
நீயும் நானும் வேறாக....
தெரியவில்லை அதைத் தவிர....
No comments:
Post a Comment