உன்னிடம் நான் கொண்டிருப்பது எது ? காதலா! இல்லை என் உயிரை இந்த காதல் என்ற வட்டத்தில் அடைத்துவைக்க எனக்கு விருப்பம் இல்லை .....
எல்லாவற்றையும் தாண்டி ......எல்லைகளைக்கடந்து நீ இருந்ததால் தான் நான் உன்னிடம் வந்தேன்
அவ்வாறென்றால் இது அன்பா, பாசமா, பிரேமையா எதுவென்று நான் சொல்வது ?
இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு இனம் புரியாத உணர்வு இது...
உன் ஒவ்வொரு உணர்வுகளையும் நேசிக்கிறேன் ....
உன் சின்ன சின்ன ஆசைகளையும் நேசிக்கிறேன் .....
உன் சின்ன சின்ன வருத்தங்களையும் நேசிக்கிறேன் ......
நீ நேசிப்பதை நான் நேசிக்கிறேன் .....
நீ சுவாசிப்பதை நான் நேசிக்கிறேன் .....
மொத்தமாய் உன்னை என்னில் அடக்கிக்கொள்ள விரும்புகிறேன் .......
நான் என்பது நீதானே என் உயிரே .....
No comments:
Post a Comment