Friday, May 22, 2009

வரம்

ஒவ்வொரு முறையும்
நீ
என்னைத் தாண்டிச் செல்லும்போது உன்
மௌன குரலாக ஏதோ
என்னில் உணர்வை
ஏற்படுத்தி விட்டு போகிறாய்
*****
என்னவென்று
அறிய முற்பட்டாலும்
என்னில் இனிக்கும் அந்த
நினைவுகளை
உள்நோக்கி சோதனை
செய்து
உன் மௌனமான
உணர்வுகளை
காயப்படுத்த
விரும்பாமல் விட்டுவிடுகிறேன்
****
சில நேரங்களில்
உன் மௌனமே என்னை
மெளனமாக இருக்கச்செய்து
விடுகிறது
நீ
என்னவென்று விரும்பி
கேட்டாலும்
என்னால் ஒன்றுமில்லை
என்றுதான் சொல்லமுடிகிறது ....
****
என் உணர்வு உன்னைத்தாக்கி
காயப்படுமே என்று
என்னில் அடக்கமாகிறேன்
உன் புன்னகையால்
சமாதானம் ஆகிறேன்....
*****
அந்த என் திருப்தியற்ற
என் பதிலால்
நீ
சமாதனம் ஆகாமல்
என்னில் ஒரு தாக்கத்தை
ஏற்றிக்கொண்டே இருக்கிறாய்
என் நினைவில்
சோக முகம் காட்டி
திரும்ப திரும்ப என்னில்
வந்துகொண்டே இருக்கிறாய்
*****
உன்னை சிரிக்க வைக்கவே
எனக்கு ஆசை
உன்னில் நான் சிரித்தபடி
இருக்கவே ஆசை
உன் மடி சுகம் தேடி ஆறவே
ஆசை
உன்னில் கரைந்து
மறைந்து விடவே ஆசை
****
எனக்கான பதிலாய்
நீ இருக்கிறாய்
உனக்கான உணர்வாய்
நான் இருக்கிறேன்
உன்னில் நான்
உணர்வாய் கலந்து
உயிராய் கரைந்து
என்னை தொலைத்து
கொள்ளவே ஆசை
****
வேண்டும் வரம்எனக்கு
வேண்டும்
தவறாமல் தருவாய்
என்ற மனநிறைவோடு
முதல் புள்ளியை வைக்கிறேன்
கோலம் போடுவது உன்கையில்
என் மனமே.....!
********************************







No comments:

Post a Comment