உன்னுடன் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் என்னை புதியவனாக உணர்கிறேன் .....உனக்காகவே ஒவ்வொரு நொடியையும் வாழ ஆசைப்படுகிறேன் .......
என்னுடைய வாழ்நாள் முழுவதும் உன்னிடமே கழிக்க ஆசைப்படுகிறேன் ....என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என் உயிரே ......
கடவுள் என்முன் தோன்றி வரம் என்ன வேண்டும் என்று கேட்டாரென்றால் இழந்து போன என் இளமையை உன்னுடன் வாழ எனக்குத் திருப்பித்தா என்று கேட்பேன் .....
இப்பொழுதிருக்கும் என் வாழ்க்கையை மறந்து உனக்கான பகுதிகளை மட்டும் நினைவில் வைத்து வாழவே ஆசை என் அன்பே....
கொஞ்சமே கொஞ்சம் என்கையை பிடித்தாய் என்றால் இந்த நிகழ்வுகளை மறந்து உன்னுடனான தொடுதல்களை நினைத்து கொஞ்சம் வலிகளை மறப்பேன் ....
வாழ்கையில் என்னை ஏணியாக்கி உயர்ந்தவர்கள் ஏராளம்...அவர்களை வாழ்த்துகிறேன் .....ஆனால் என் முதுகிற்குப் பின்னால் பேசுகிறார்களே அவர்களை என்னால் மன்னிக்க முடிவதில்லை ......அந்த உயர்ந்தவர்கள் என்னை பொறுத்தவரையில் தாழ்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் .....இருந்துவிட்டு போகட்டும் ....
அவர்களிடமிருந்து ஒதுங்கவே பிரியம் ....ஒதுக்கி விடுகிறேன் .....உன்னை பார்த்தபின்புதான் என்னால் அவர்களை ஒதுக்கமுடிகிறது .....உன் உந்து சக்தியால்தான் அவர்களிடமிருந்து தப்பிக்கிறேன் ....
என் வாழ்நாள் ஆதாரம்உன் அண்மை ,நெருக்கம்,காதல் எல்லாமே ....அது இல்லையென்றால் நான் காய்ந்த இலைஆகி இருப்பேன் .......இந்த காற்றும் என்னை எங்கோ அடித்துச் சென்றிருக்கும் ......
கனவுகளையே நேசிக்கும் எனக்கு நிதர்சனத்தை காட்டியது உன் அன்பும் பாசமும்தான் .....
கசப்பையே குடித்துப் பழகிய எனக்கு உன் காதலும் நெருக்கமும் அமிர்தத்தை கொடுத்தன .....இப்பொழுது அதையே மனது விரும்புகிறது உன் நிழலிலே வாழ விரும்புகிறது...உன்மடியிலே என்னை தொலைத்துக்கொள்ள மனது விரும்புகிறது .....உன் இளம்சூடான மார்பில் என்னைச் சாய்த்துக்கொள்ள மனது விரும்புகிறது ......இவையெல்லாம் வாழ்நாள் முழுவதும் கிடைக்காதா என்று மனது ஏங்குகிறது என் உயிரே ...
என் அழகான மனைவிக்கு அவளின் சின்ன சின்ன ஆசைகளை கிட்டவே இருந்து நிறைவேற்ற ஆசை .....அவளின் உணர்வுகளுக்கு மரியாதை செய்ய ஆசை ...
மனம் கோணாமல் நடந்துகொள்ள ஆசை ......எவ்வளவு ஆசை...எத்தனை ஏக்கங்கள் ....அத்தனையும் உனக்காக செய்யவே ஆசை...
நான் நினைத்தது எல்லாம் அரைகுறையாய் நடந்தது .......உன்னை மட்டும் முழுதாக என்னிடம் வைத்துக்கொள்ள ஆசை என்னுயிரே .......
என்கைப்பிடித்து உன்னுடன் அழைத்துக்கொள் ......உனக்குள்ளே அணைத்துக்கொள்....
உன்வாசதிற்காக ஏங்குகிறது என் இதயம்.....
No comments:
Post a Comment