Monday, August 31, 2009

கடிதம்

நீ தேடும்போது நான் மட்டும்

உன்னோடு இருக்கையில்

நீ மட்டும் ஏனோ தானே

வரவேற்கிறாய் வேதனைகளை

ஏனோ எனக்கு வலிகளாகத் தருகிறாய்

******

உன்னைத்தான் நான் என் எல்லை

என்றிருக்க.....

என் எல்லை ஏனோ என்னைத்தாண்டி

போகிறது
என்னை விட்டு தூரமாய்

*****

உயிர் வாழும் கொஞ்சகாலம்

உனக்கு நான் உண்மையாய் இருக்கும்

சந்தோசம் தரமாட்டாயா என் அன்பே

என்னை தவிக்கவிட்டு

என் அன்பை உதறி விட்டு

உணர்வுக்கு அடிமையாய் போவதென்ன

என் நெஞ்சம் உன்னைக் கண்டு நோவதென்ன ....

*****

காலம் ஒரு நாள் மாறும்

என் கவலைகள் யாவும் தீரும்

என்றிருக்க

என்னை ஏந்திழையாள்

ஏக்கம் கொள்ள செய்வதென்ன

*******

கனவில் நினையாத

காலம் இடைவந்து

நம்மைப் பிரித்தாளும்

ஆலமரக்கிளையில்

ஆடி வந்த அன்றில் பறவை

ஒன்றை விட்டு ஒன்று உயிர் வாழாது

காணாமல் உயிர் போகாது...

*******

இந்தக்குயில் பாடும்

உயிருடனும்

சாகவரமாய் காதலுடனும்

உனக்காக

பாடுவதில் அதற்கு சந்தோசம்தான்

********

Tuesday, August 25, 2009

எப்படி?

தவறாக எண்ணிக்கொண்டு

என்னிடமிருந்து விலகி விடாதே

நான் தவறாமல் உன்னிடம் பேசவேண்டும்

அதுமட்டுமே நம் காதலின் எல்லை

அதற்கும் எல்லை என்றால் எப்படி....?

*******