Tuesday, April 14, 2009

நண்பன் ரவிக்கு ஓர் கடிதம்

சென்ற வருடம் இந்நேரம்

நீ உயிருடன் இருந்தாய்.....

பார்க்க முடியாமல் போகட்டும் என்றே

என்னை விட்டு வெகுதூரம் பறந்தாய்...!

உனக்கான கடமையை மறந்து

எதற்காகவும் பந்தப்படாமல்

எங்களின் நினைவுகளைச் சுமந்து

நாங்கள் எளிதில் வரமுடியா இடத்திற்கு

நீ சென்றது ஏனோ என் நண்பனே !

நிரந்தர இடம் இதுவல்ல அதுவென்றே

தோன்றியதோ உனக்கு.....!

இல்லை உன்னைத்தாங்கத்தான் இந்த பூமி

தாய்க்கு மனமில்லாமல் தன் மடியில் உறங்க

வைத்தாளோ என் நண்பனே !

நிரந்தர உறக்கம் எங்களுக்கும் உண்டு

அதற்கு முன்னாள்

அனுபவிக்கும் செயல்கள் ஆயிரம் உண்டு

எங்களுக்குப் பின்னே வரும் சந்ததி நீ

எங்களுக்கு முன்னே பறந்து ஏனோ !

இதுதான் விதியின் சதியோ என் நண்பனே !

உன் உயிர் காக்க வழியில்லாமல்

உன் முகம் பார்க்க முடியாமல்

உன் நினைவுகளைச் சுமந்தே செல்கிறது

எங்களின் பயணம்...

முடியும் தருணத்தில் நானும் உனக்கு

அலை பேசுகிறேன்

உன்னோடு வந்து சேர்ந்து கொள்கிறேன்

அதுவரை எனக்கான இடத்தை

காத்திரு என்னை எதிர்பார்த்திரு!

No comments:

Post a Comment