Thursday, April 16, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 7

ஒவ்வொருமுறையும் நான் உன்னிடம் தோற்றுத்தான் போகிறேன் ......என்னைப்புரியவைக்க முயற்சி செய்து அதில் அப்பட்டமான எனக்கே தெரியாமல் சில கொடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதால் உன்மனம் புண்ணாகி போகிறது அதற்காக மனம் வருந்துகிறேன்.....

எனக்கான யோசனைகள் எல்லாம் உன்னைச் சுற்றியே வந்திருக்கிறது இதை பல தருணங்களில் உனக்கும் தெரியப்படுத்தி இருக்கிறேன் ஆனாலும்கூட நீ இன்னமும் என்னை தவறாகத்தான் எண்ணி இருக்கிறாய்...

தொலைவது என்பது உனக்கும் எனக்கும் புதிதல்ல நானும் தொலைந்துதான் போனேன் உன்னிடம்...அதேபோல் நீயும் தொலைந்துதான் போனாய்....என்னிடம்

இதில் நானோ நீயோ மாற்றுக்கருத்து கூறவில்லை......அதில் எந்த மாற்றமும் இல்லை.......

இருந்தாலும் நம் இருவருக்கும் நெருடல்கள் நேரிடுகிறது ஏன் என்றுதான் தெரியவில்லை....

கோபத்தில் பரிமாறிக்கொள்ளும் வார்த்தைகளுக்கு நீ காயப்பட்டு போகிறாய் ......

நானும் தெரியாமல் காயப்படுத்தி விடுகிறேன்...

இருக்கட்டும் இத்துடன் முடியட்டும் இந்த கோப பரிமாற்றங்கள்.....இன்றுமுதல் என்னை புது மனிதனாகப் பார்ப்பாய்.......

No comments:

Post a Comment