இது குயிலின் குரல்....ஒன்றாக கூவித்திரிந்த ஒரு பறவையின் குரல்...காத்திருந்தது காத்திருந்து கண்கள் பூத்த ஒரு குயிலின் கண்ணீர் குரல் ....
தேடிவந்த இடம் இதுதானென்று அறியாமல் தனக்கென ஒரு இடத்தைத் தேடித் தேடிக் களைத்தஒரு குயிலின் குரல்...
காத்திருந்த காதலுக்காக சுயநலமில்லாமல் தன்னை கொடுத்த குயிலின் குரல்....
தன்னிடம் இருந்ததை எல்லாம் தனக்கென வைத்துக்கொள்ளாமல் உனக்கென கொடுத்த குயிலின் குரல்..
பறிகொடுத்த நெஞ்சை எங்கேனும் கிடைக்காதா என்று தேடித்திரியும் குயிலின் குரல்..
எங்கேனும் அந்த குயிலை நீங்கள் கண்டாலும் அந்த குயிலின் கதையை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள் .....
எங்கேனும் ஒரு ஒடிந்த மரக்கிளையில் அது மட்டும் தனியாக அமர்ந்து தன் காதல் கீதத்தை இசைத்தபடி இருக்கும் ....
அந்த குயிலின் சோக கீதம் பிடித்தாலும் பிடிக்கவிடாலும் அதன் ராகத்தை இடையூறு செய்யாமல் ஒதுங்கி செல்லுங்கள்...
முடிந்தவரை மனிதர்கள் இல்லா இடத்தில்தான் அது பாடிக்கொண்டிருக்கும் தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும் ........
ஆற்றுப்படுத்த யாரும் இல்லா விட்டாலும் ஆறுதலை அது தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் ....
காயப்பட்ட நெஞ்சங்களை தான் காயப்பட்டு அது தன் மதுர கீதத்தால் ஆற்றிக்கொண்டிருக்கும் ....
கொஞ்சம் நின்றுதான் கேட்டுசெல்லுங்கள் அதன் கதையை .....
எல்லோரையும் போலவே அதற்கும் வந்ததுதான் காதல்...தனக்கென எண்ணாமல் உனக்கென எண்ணும் மனதுதான் அதற்கும் .....
கொஞ்சம் அதன் பாட்டை நீங்கள் உற்றுக்கேட்டால் தெரியும் அதன் பிரேமையை ...
காதலின் ஆழத்தில் தன்னை நுழைத்துக்கொண்ட அந்த குயில் தன் சக துணையைதேடித்தான் காத்துக்கொண்டிருகிறது ....
வந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் மரத்திற்கு மரம் அது தன் கீதத்தை இசைத்துக்கொண்டிருகிறது....
கொஞ்சம் நீங்களும்தான் கேட்டுப்பாருங்களேன் .......
No comments:
Post a Comment