எத்தனை நாள் ஆகிவிட்டது உன்னைப்பார்த்து .....வெறும் பார்வைகளாலேயே பேசிக்கொண்டு....நெருங்கவும் முடியாமல், பேசவும் முடியாமல் என்ன கொடுமை இது....
என்னக்கான உரிமையைத்தானா பக்கத்தில் இருந்தும் அனுபவிக்க முடியாமல் போகிறது...
இதற்க்காகவா நான் உருகினேன்.....உன்னை என்னவளாக ஏற்றுக்கொண்டேன் .....கேட்டால் எல்லாம் உங்களுக்குத்தான் என்று சமாதானம் சொல்கிறாய் என் நிலை அறியாமல்....
உனக்கு புரியவில்லையா என் வேதனை...உள்ளுக்குள் எரிக்கும் நெருப்பு...என் நெருப்பு மூச்சு....
புரிந்தும் புரியாமல் இருக்கின்றாயா என்றுதான் எனக்கு தெரியவில்லை...
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் என் நெருப்பு மூச்சே என்னை சுட்டெரித்துவிடும் ..கொன்றுவிடும்...
இந்த அவஸ்தையும் கொடுமையும் அனுபவிக்க என்னால் முடியவில்லை அதற்க்கு கொஞ்சம் விஷத்தை கொடுத்து என்னை கொன்றுவிடு உன் கைகளால் அந்த திருப்தியாவது எனக்கு கிடைக்கட்டும்....
நானும் அந்த நிலையில்தான் இருக்கிறேன் என்று சொல்கிறாய்...ஆனால் என் முடிவு .....சொல் !
No comments:
Post a Comment