அவனுக்குத்தெரியும் அவளின் ரணம்..... இருந்தாலும் அவள் அதை சொல்லி இருக்கக்கூடாது.... தெரியாமல் சொல்லிவிட்ட வார்த்தைகளினால் எவ்வளவு முரண்பாடு என்று அவளுக்கும் அவனுக்கும் இப்போது தெரிந்திருக்கும்......
அவனின் ஒவ்வொரு செயலும் அவளுக்காக பார்த்து பார்த்து செய்யும் பட்சத்தில் ஏதோ ஒன்று அவளின்மூலம் வெளிப்பட்டு மனது ரணமாகிறது அவளுக்கும் அவனுக்கும்....
எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இருந்து என்ன பயன். பார்வையாளனாய் ஒரு விமர்சகனாய் அவளின் வாழ்க்கைக்கு இருக்க அவன் பிரியப்படவில்லை....அவளுக்கு உணர்வாய் உறவாய் உயிராய் இருக்கவே அவனுக்கு பிரியம்.....அதைத்தான் அவனும் விரும்புகிறான் ....
அவன் கேட்பது அவளின் பாதியாய் தான் மாற....அவளுக்கு புரியுமா அவனின் தவிப்பு....எதற்காக துடித்துக்கொண்டிருக்கிறது அவனின் இதயம் என்று....
தெரியாமல் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் எவ்வளவு சோகங்களை போர்த்திக்கொள்கிறது என்பது அவளுக்கு தெரியாதா என்ன?
இருந்தும் இடறல்கள் வந்து விடுகிறது அவளுக்கும், அவனுக்கும் ....புரியாத தருணங்கள்....தொலைந்து போன நாட்களை அவன் சாட்சிக்கு அழைக்கவில்லை ...அவளுக்கு அவனின் சாஸ்வதம் புரிந்தால் சரி ....
No comments:
Post a Comment