என் வாழ்நாளின் பெரும்பகுதியை நான் வீணடித்து விட்டதாகவே தோன்றுகிறது .... என் வாழ்க்கையில் இழந்தவை ஏராளம் ஏராளம்......
இனிமேலும் இழக்க விரும்பவில்லை.....உன் அன்பை, உன் ஸ்பரிசத்தை, உன் காதலை, உன் நெருக்கத்தை....உன்னை முழுதுமாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்.....
என் கை பிடித்து வாழ்நாள் முழுவதும் வலம் வருவாயா என்னவளே! உனக்காக நெஞ்சு நிறைய அன்புடனும், பாசமுடனும், உன்னுடைய பாசத்திருக்குரியவன் காத்துக்கொண்டிருக்கிறான்.....
நான் அமைதியான நீரோடை என்றால் நீ மென்மையான வருடும் தென்றல்!
நான் படரும் கொடி என்றால் நீ தலைகோதும் காற்று!
கொந்தளிப்பில்லா நீரோடையில் மென்மையான தென்றல் வீசினால் நீரோடை நீர் நிலையை வருடும்போது லேசாக சிலிர்த்துக்கொள்ளுமே அதே நிலையை நான் உணர்கிறேன்....உன் பெயரைச் சொல்லும்போதெல்லாம் , உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ......
நிலவின் குளுமையாய் உன்னை அள்ளிக்கொள்ளும் அதேநேரம் உன்னிடத்தில் தீயின் வெப்பத்தையும் உணர்ந்திருக்கிறேன் ..வழி தவறும் ஆடாய் நான் இருந்த போது .....
இருந்தாலும் என்னை ஏற்றுக்கொள்ள என்றுமே நீ தயங்கியது இல்லை ...அது நான் பெற்ற வரம் .....எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம்....!
அதனால்தான் நீ எனக்கு கிடைத்ததை கொண்டாடுகிறேன் கூத்தாடுகிறேன் ....
சிலநேரம் என்னை அறியாமல் உணர்ச்சிவசபடுகிறேன்.....தவறாக எண்ணாதே என் உயிரே .....
No comments:
Post a Comment