அதனாலதான் எந்த பிரச்சனையையும் நான் கூச்சமில்லாமல் அணுகமுடிகிறது
நான் வாழ்ந்த வாழ்க்கை முறை என்னை கட்டிப்போட்டதுதான் ஆனால் என்னால் விசாலமாய் யோசிக்க முடிந்தது உன்னை பார்த்த பின்புதான்....
ஆனாலும் சில வேளைகளில் என்னால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை தாண்டி யோசிக்க முடிவதில்லை....ஆனாலும் மௌனத்தினால் அதை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன்...
இருக்கட்டும் பிரிதொருநாளில் என்னை புரிந்து கொள்வாய் என்றே நினைக்கிறேன்....
என்மேல் நானே வெறுப்புக்கொண்டு வாழ்வைச் சபித்துக்கொண்டிருந்த வேளையில் தென்றலாய் உன்வரவு இருந்தது....
இடையில் உனக்கும் எனக்கும் அடித் புயல்கள் ஏராளம்....ஆனாலும்கூட நம் காதலின் அடித்தளம் அழியவில்லை அதுவே நம் வெற்றி என்றுதான் சொல்லவேண்டும்...
இதயபரிமாற்றங்களை இன்னும் சில வருடங்கள் முன்பே தெரிந்திருந்தால் அப்போதே உன்னைச் சிறைஎடுதிருப்பேன்.....
அதனால்தான் வெளிப்பார்வை பார்க்கும் சமூகத்திற்கு நம் பயபடவேண்டி இருக்கிறது....
உனக்கும் எனக்கும் தெரியும் நம் கலப்பு தூய்மையானது, உண்மையானது என்று...
ஆனாலும் பார்க்கும் பார்வைகள் வேறாகும்போது சமூகத்தின் பார்வைக்கு பயப்பட வேண்டி இருக்கிறது....
நான் இருக்கும் இடத்தில் வேறு யாரோ உன்னுடன் உனக்கு இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது உன்னுடன் அவர்கள் இருக்கும் நிழல்படத்தைக்கூட நான் விரும்பவில்லை உயிரே....
இருக்கட்டும் உன் மனது என்னிடம்தானே இருக்கிறது அதை பத்திரமாய் என் இதயச் சிறையில் வைத்துப் பூட்டிவிடுகிறேன்.....
உன் இதயம் எனக்கு மட்டும்தானே சொந்தம்....
No comments:
Post a Comment