Thursday, April 23, 2009

என் உயிருக்கும் ஓர் கடிதம் - 9

உன்னை என்னிடம் சேர்த்ததற்காக அந்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.....நானும் உன்னிடம் வந்ததற்காக கொஞ்சமே கொஞ்சம் புண்ணியம் செய்திருக்கிறேன் .....அதனால்தான் உன் தோளில் சாய்ந்திருக்கிறேன்......நிம்மதியாய்

இனியும் உனக்காகவே அந்த கடவுளிடம் வேண்ட ஆசை.....உனக்கு நிம்மதியான வாழ்க்கையை கொடு என்றுதான் வேண்டுகிறேன்....

புன்னகைப்பூவாய் என்றும் நீ இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.....

நீ சந்திக்கும் ஒவ்வொரு நெருக்கடிகளில் இருந்தும் இறைவன் உன்னை காப்பற்றட்டும் ...

நான் உனக்காகவே என்னை தேய்த்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் ....

ஏதோ என்னால் முடிந்தது உனக்கு கொடுக்கவே ஆசைப்படுகிறேன் நீ வேண்டுபவை நிம்மதியாக இருந்தாலும் ......

என்னைப்பற்றி நீ கவலைகொள்ள தேவை இல்லை.....என் வாழ்க்கைப்பயணம் உன்னை நோக்கியே இருக்கும் இருக்கணும்.....அதைத்தான் நானும் வேண்டுகிறேன் .....

அந்திமக்காலத்தில் உன் மடியில் தலை சாயவே விருப்பம்...கண்மூடி தூங்கவேண்டும் மீளாமல் உன்சுகத்துடனேயே சென்றுவிடுகிறேன் ......

எனக்கான இடம் நீதான் என்று நிர்ணயிக்கப்பட்டது இவ்வுலகில்....முடிந்தவரை உன்னை திருப்திப்படுத்தவே ஆசை .....

நீ கண்ணீர் சிந்தாமல் இருக்கவேண்டும் இனியேனும் ......பயம் கொள்ளாமல் இருக்கவேண்டும் இனிமேலும்....

சமுதாயப்பர்வைகளில் நான் உயிரோட்டமாக உனக்கிருக்க விரும்புகிறேன் ....

உனக்கான என் பங்களிப்பு நிச்சயம் நிறைவேறும் நிறைவேற்றிவிட்டுத்தான் செல்வேன்....

நீ எதைக்கேட்டாலும் என்னால் தரமுடியும் உயிர் வேண்டும் என்றாலும் ......

எனக்குத்தேவை நீ எப்போதும் என்பார்வையில் படும்படி நடந்துகொள்ளவேண்டும் ....

அது ஒன்றே போதும் எனக்கு..

நல்லவையோ கெட்டவையோ மனம்திறந்து சொல்லவேண்டும் என்பதே என் ஆசை....

இதோ நீ செல்கிறாய் அடுத்தவாரம் .....ஒருநாள் விடுமுறையாக ......எப்படி அந்த ஒருநாளை எதிர்கொள்ளப்போகிறேன் என்றுதான் தெரியவில்லை ........

நீ இல்லாத இடம் எனக்கு வெற்றிடமாகத் தெரிகிறது .......ஒரே சூன்யமாய் .....

வேறொன்றையும் ரசிக்கத்தோன்றவில்லை உன்னைத்தவிர ........

No comments:

Post a Comment