உனக்காகவும் எனக்காகவும் இல்லாமல் எல்லாமே நமக்காகத்தான்.....என்று நானிருக்க...நடக்கும் நிகழ்வுகள் வேறாகத்தான் இருக்கிறது...
எல்லாமே என்னை கொஞ்சம் தடுமாற வைக்கிறது....மனதின் ஓரம் சின்ன குத்தீட்டி வலியாய்....
எல்லாமே எல்லாமும் என்று நினைத்துக்கொண்டு இதோ இந்த ரயில் உன்னைச் சேர்த்து ஓடிக்கொண்டிருக்கிறது ....
எனக்கான நிறுத்தம் இவ்வளவு சீக்கிரம் வருமென்று நான் எதிர்பாரக்கவில்லை ....
ஆனாலும் என் நிறுத்தத்தை நினைவுபடுத்திய உனக்கு என் நன்றி...
இழுத்துச்செல்லும் ரயில் வண்டியில் கடைசியாய் இறங்குவது நாமாகத்தான் இருக்குமென்று நினைத்திருந்தேன்....உன் வாய் தவறி அந்த வார்த்தையை சொல்லாதிருக்கும்வரை....
சொல்லிய வார்த்தையை நீயும் கேட்ட நானும் இல்லையென்று சொல்லமுடியாது....
நீ எப்படிப்பட்ட சூழ்நிலையில் அதை சொன்னாய் என்று எனக்குத்தெரியும்....இருந்தாலும் என்னால் அந்த சூழ்நிலையில் உன்னை கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் அந்த சக்தியை தடுக்க முடிய வில்லையே என்று தான் வருந்துகிறேன்...
உன்னை ஆகர்சப்படுத்தும் சக்தியாய் நானில்லையே என்றுதான் வருந்துகிறேன்...
பரவாயில்லை வாய் தவறும் ஒவ்வொன்றும் குற்றமில்லையே.....
என்னிடம்தானே சொன்னாய்....