கண்கட்டி நீ என்னை
தள்ளிவிட்ட போதும்
உன் சுவாசம் என்னை
உன்னிடம் நோக்கி ஈர்த்தது
கைகொட்டிசிரிக்கின்றாய்
அந்த புன்னைமரத்து பூப்போலே
இதழ் கடித்து சிவக்கின்றாய்
இந்த வெண்தாமரை நிழல் போலே
****
நினைவுகள் என்னை
நினைத்தபோதும்
நிகழ்வுகள்
எனக்காக தடுத்தது
என்னிடம் உன்னை பிரித்தது
மரத்தடி நிழலே
சாட்சி
நம் விளையாட்டுக்கெல்லாம்
உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
நான் மரத்தடி நிழலைத் தொடுகிறேன்
உன் சுவாசக்காற்றையே உணர்கிறேன்
****
நினைவிருகிறதா
நீ கொடுத்த கடைசி முத்தம்
என் கைகளில்
நினைவிருகிறதா
நீ சிந்திய அந்த கண்ணீர்த்துளி
பனியாக மாறி
என்முகம் பார்த்தது
நினைவிருக்கிறது நீ
நின்ற புல்லின் மடி
இளம்சூடாய் வருடுவதை
நினைவிருக்கிறது
எனக்காக நீ கொடுத்த
அறையும் கூட !
****
காதலை படிக்க
நான் காதலை பார்க்க வேண்டி வந்தது
அனுபவம் பெற
உன் மங்களமான முகத்தை
ரசிக்க வேண்டி வந்தது
தோல்வி காண
நீ உறவோடு ஒத்துபோனது
எல்லாம் எல்லாமாய்
நான் மட்டும் தனிமையில்
மரத்தடியே
முறிந்த கிளை போலே .......
No comments:
Post a Comment