நான் போகும் பாதையிலே
நாட்டவைத்த கள்ளிச்செடி!
உச்சந்தலை நோகுதடி !
உள்ளுக்குள்ளே வேகுதடி !
நான் பார்த்த மரமெல்லாம் !
பூப்பூத்து காய்க்கும்போது !
எனக்குன்னு வச்ச மரம் !
வெட்ட மரமா போனதென்ன !
வெக்கையாலே நோவதென்ன !
உன்னசொல்லிக் குத்தமில்ல !
ஊர்வம்பு குத்துதடி!
காஞ்ச மறந்தான் எப்போதுமே !
கல்லடி படுமடி
கண்ணான கண்ணு இது
என் கண்ணுக்குள்ளே பொத்திவச்சேன்
காஞ்ச முள்ளை ஊசியாக்கி
குத்திப்புட்டு போனதென்ன
என் உள்ளமெல்லாம் நோவதென்ன!
No comments:
Post a Comment