நீ
மறுபடி மறுபடி
என்னவென்று கேட்கும்போது
மௌனத்தையே என்னால் பதிலாக
கொடுக்கமுடிகிறது
என்னவென்று சொல்ல என்னால்
முடியவில்லை
சொன்னாலும் உன்னால்
அதற்க்கு தீர்வாக
கொடுப்பதற்கு ஒன்றும்
இல்லை .....
முடிந்து விட்ட எல்லைகள்
நம் இருவருக்கும் எமனாக
இருக்கையில்
எதைச் சொல்லி
நான் உன்னிடம் தேற்ற ....
******
என் வருத்தம்
இன்னதென்று தெரிந்து
நீண்ட நாள் நீ வருந்துவதை
காட்டிலும்
இன்னதென்றே தெரியாமல்
ஒரு நாள் மட்டும் வருந்தி
மறந்து போவதொன்றே
எனக்காக நீ கொடுக்கும்
ஆறுதல்...
*******
உனக்கான மெழுகாய்
நான் உருகிவிடவே ஆசை
வெளிச்சம் மட்டும் உனக்கு
கொடுத்து இருட்டில்
கரைந்து போகவே
இந்த மெழுகின் ஆசை....
******
வரமாய் நானிருந்து
உன் துன்பம் நீக்க வேண்டும்
என் சாபத்தை என்னில் நானே
புதைக்கவேண்டும்
புதை குழியில் உன்னைத்தள்ளி
உன் வாழ்க்கைக்கு
நான் முற்றுப்புள்ளியாய்
நானிருக்க விரும்பவில்லை .....
உன் வாழ்கையின்
தொடக்கபுள்ளியாய்
கோலம் போடவே ஆசை
*****
உனக்கான
கேள்விக்கு நான் பதிலாய்
இருக்கவேண்டும் .....
எனக்கான கேள்விகள்
என்னுள் புதைக்கப்படவேண்டும்
நீ உணராமல்...
உனக்கு வலிக்காமல்...
வலிகளையே
பார்த்து பழகிய
உனக்கு
நான் மருந்தாகவே ஆசை
உன் புண்ணிற்கு ...
******
என்னைச் சுற்றிலும்
என் சுற்றம்
என் பொருளையே தேடுகிறது
என்னைத் தவிர
எல்லாவற்றையும் கேட்கிறது ...
*******
வேண்டாத என்னை
என்னவென்று சொல்ல
விருந்தாளியாய்
இருந்துவிட்டு
மொய்யாக உன்னை
கொடுத்துவிட்டு போ
என்கிறது...
என்ன செய்வேன்.....
********
No comments:
Post a Comment