Monday, June 29, 2009

ஏக்கம்

இன்னும் எத்தனை முறைதான்

என்னை தவிக்க விடுவாய்....

உன்னை ஏதோ ஒரு விதத்தில்

நெருங்கிவிட்டேன் என நினைக்கும்போது

எண்ணச் சிதறலாய் ஏதோ ஒன்று

என்னை உன்னிடமிருந்து தள்ளி

வைத்து தவிக்கவிடுகிறதே கண்மணி ....

*****

உன் தாக்கம் என்னில் முழுமையாக

ஆக்கிரமித்துக்கொண்டு

உணர்வோடும், உயிரோடும் எம்மை

பிணைத்துக்கொள்ளும் தருணங்களை

நான் எவ்வாறு பழிகொடுப்பேன் கண்மணி....

******

உனக்கான அலைவரிசை

நான்தான் எனும்போது

இந்த தொலைவரிசை என்னை

ஒன்றும் செய்ய முடியாதுதான்....

இருந்தாலும்...

மனதின் ஓரம் உனக்கான ஈரக்கசிவு

என்னை தடுமாற வைக்கிறதே கண்மணி....

*******

சற்று தாமதமானாலும்

எனக்காக வரவேண்டும் முழுநிலவு

இன்னொருமுறை

அமவாசையானாலும் .....

உன் முகம் பார்த்து நான் விழிமூட.....

*******

கைப்பிடிக்க நானும்

கைகொடுக்க நீயும்

தயாராய் இருக்கும்போது

நமக்கான தருணங்களை

அமைத்துக்கொள்ள இன்னமும்

தாமதமென்ன கண்மணி....

*******

காத்திருக்கும் பூ கூட

காம்புடன் காத்திருக்கும் போது

என்னை மட்டும் வாசமாய் விட்டுவிட்டு

என் சுவாசத்தை எடுத்துக்கொண்டு போவதென்ன

கண்மணி ...

*******

Friday, June 19, 2009

என் உயிருக்கு ஓர் நம்பிக்கை கடிதம்

ஒவ்வொரு நாளின் முடிவில்லா
தருணங்களில்
உன் ஒவ்வொரு அசைவும்
உணர்வாய் என்னை துளைக்கிறது
கேள்விகளால்......
*******
எனக்காக பதிலாய் நீ இருப்பாய்
என்றுதான் உன்னை சரணடைந்தேன்
நீயே கேள்வியாய் இருக்கிறாய் எனும்போது
தடுமாறித்தான் போகிறேன்
எனக்கான இடத்தை தேடி...
********
நான் தேடும் ஒவ்வொன்றும்
உனக்கான பதிலாக நான்
இருக்கமாட்டேனா என்பதுதானே
நீயோ கேள்விக்குள்ளேயே பதிலைத்
தேடுகிறாய் ...
********
எல்லோருக்கும் போராட்டம் வாழ்கையின்
ஒரு பகுதி
உனக்கு போராட்டமே வாழ்கையாய் போனது
விதியின் விளையாட்டுத்தான்......
*******
உன்னை மீறி ஒவ்வொன்றும்
நடக்கும்போது
வாடிப்போன உன் முகத்தை
கையில் ஏந்திக்கொள்ள தோன்றுகிறது
*******
உன் தோளோடு தோள் சேர
நான் இருக்கும் போது
சில வேளைகளில் உன்னை
மறந்து துடிப்பது ஏனோ....
******
உனக்கான வலியை தாங்கிக்கொள்ள
எம் இதயம் இருக்கும்போது
உன்னை மறந்து உன் இதயம்
எதை தேடுகிறது.....
******
வெறும் கற்பனைக்கு அல்ல என் காதல்
காலம் தோறும் கைப்பிடிக்கத்தான்
என் காதல்...
சுகத்துக்கல்ல என் காதல்
உன் வாழ்நாள் முழுதும் தாங்கும்
வலியாய் இருக்கும் என் காதல்....
கைப்பிடிக்கவல்ல என்காதல்
கரை சேரவும்தான் என் காதல்....
காலங்களைத்தாண்டி நம் காதல்
ஜெயித்துக்கொண்டே இருக்கும்....
*******




Friday, June 12, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 12

ஒவ்வொரு முறையும் நீ என்னை பார்க்கும் போது என்னோடு பேசமாட்டாயா என்னுடனே வந்துவிடு என்று கூப்பிடமாட்டாயா என்றுதான் மனது ஏங்குகிறது ......
குறைந்தபட்சம் உன் கைகளை என்கைகளோடு பிணைத்துக்கொள்ள மாட்டாயா என்று எதிர்பார்கிறது .....
சூழல் அமைவதில்லை...அமைந்தாலும் நீ சந்திக்கும் பிரச்சனைகளின் வீரியம் அந்த நினைவை மறக்கச் செய்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது ......
நானும் எதிர்பார்ப்பை குறையாமல் அனுதினமும் உன்னிடம் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறேன் .......
உன் தொடுதல் இல்லாத அரவணைப்பு என்னை உன் மீதான ஏக்கத்தை அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது ......
ஒருமுறையேனும் என்னை அணைத்து உச்சி நுகர மாட்டாயா .....
ஒரு முறையேனும் என் கைப்பிடித்து உன் கைகளுக்குள் சிறை வைக்கமாட்டாயா ....
ஒரு முறையேனும் என்னை ஏந்திக் கொள்ளமாட்டாயா .....
ஒரு முறையேனும் என்னை ........
இப்பொழுதெல்லாம் நம் கைகள் கட்டப்பட்டே இருக்கின்றன
ஏக்க பெருமூச்சாய் என் மூச்சு உன்னைச் சுடவில்லையா ....

Monday, June 8, 2009

வடிகால்

என்னதான் மனதை மாற்ற முயன்றாலும் உன்னையேதான் மனது நாடுகிறது ....எவ்வளவோ தடுத்து கேட்டு அதட்டி பார்த்துவிட்டேன் கேட்கமாட்டேன் என்கிறது மனம்....என்ன செய்யச் சொல்கிறாய் ...
எனக்குத் தெரியும் நான் செய்வது எல்லாமே தான்தோன்றித்தனம், சுயநலம் எல்லாமே ....என்ன செய்வது நான் எனக்காக வாழவேண்டும் என்று உன்னை பார்த்தபின்புதான் ஆசைப்பட்டேன்....அதுவும் உன்னுடன், உனக்காகவே வாழ்ந்து தேய்ந்துவிடவேண்டும்.....
எனக்கென்று வாழ்கை இருக்கிறது.....அதனுள் எல்லாமே என்னை நம்பி அந்த உயிரும் இருக்கிறது....நான் வேண்டாம் என்று ஒதுக்கவில்லை.....நீயும் வேண்டும் என்றுதான் கேட்டேன்....அதுவும் எனக்காக வேண்டும் ....எனக்கே எனக்காக....
உன்னுடைய வாழ்கைச் சூழ்நிலை எனக்கு தெரியாமல் இல்லை ......தெரிந்துதானே உன்னிடம் வந்தேன்.....ஆனாலும் உன்னைத்தானே நாடுகிறது மனம்....
உன்னுடைய வாழ்க்கைக்கு என்னால் எந்த இடையூறும் வராது....எந்த சூழ்நிலையிலும் ......அதை தெரிந்து கொண்டுதான் என்னை உன்னுடன் பிணைத்துக்கொள்ள இவ்வளவு போராட்டம்.....
வாழ்க்கைத்துணை அவசியம்தான்.....ஆனால் அதுவே எனக்கு முரண்பாடு எனும்போது என்னைச் சகிக்க முடியாத ரணம் என்னுள் சாட்டை அடியாய் ......
நான் பழிவாங்கவும் இல்லை...பாபத்தைச் செய்யவும் இல்லை என்னை நம்பியவர்களை கை விடவும் இல்லை.....அவர்களுக்கான கடமைகள் அவர்களுக்கு அதில் எல்லாமே அடக்கம்....
ஆனால் என்னால் உன்னைத்தவிர அவர்களை ஒத்துக்கொள்ள முடியவில்லை....இனிமேலும் முடியுமா என்பது கேள்வி....
இனி செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை ....ஊமையாய் இருந்துவிட்டு போகிறேன் ......எனக்கு இது தேவையான ஒன்றுதான் .....அனுபவித்துவிட்டுப்போகிறேன்
அமைதிக்கு மறுபெயர் ஊமைதானே.....
என் செல்வங்களின் முன்னேற்றம் எனக்கு இனிமேல் உறுதுணை ....
முடிந்தால் கைகுடுங்கள்.....
உனக்கான வாழ்கை முறையை நான் தடுக்கவில்லை....தடுக்கவும் விரும்பவில்லை ......அதில் என் தலையீடு நிச்சயமாக இருக்காது .....எனக்காக வருந்தாதே .......எனக்கான பாதையை நான் நிர்ணயிதுக்கொண்டுவிட்டேன் என்றுதான் தோன்றுகிறது....பாதை நிறைய முட்கள்...கற்கள் ....குத்தும் கிழிக்கும் என்று எனக்கு தெரியும் .......எனக்கு அது ஒன்றே போதும்...
அடிபட்டல்தானே வாழ்க்கை .......





Sunday, June 7, 2009

கவர்ந்த பாடல் - 11

நான் படு மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்க வில்லையா
கண்ணீரில் உன்னை தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
******
உன்னைக்கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக்கான வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக்கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைப்பாடி பாடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இங்கு குயிலதானே தேடுது
******
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது
காம்பு என்ன வாழ்வது
காலம் என்னை கேள்வி கேட்குது
கேள்வி இங்கு கேலியாகி போனது
******
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்க வில்லையா
கண்ணேரில் உன்னை தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன் ......

Saturday, June 6, 2009

மனவிலாசம்

ஒவ்வொரு முறையும்

என்னை புரிந்து கொள்ளாமல்

என் எதிர்பார்புகளை

நீ தெரியாமல் விலக்கும்போது

தடுமாறித்தான் போகிறேன் நானும் ....

******

கோப பிரவேசங்களில்

என் கொடுஞ் சொற்கள்

உன்னை தாக்கும் வேகம் தாளாமல்

நீ சுருளும் போது தாங்கிப் பிடிக்க

துடிக்கிறது என்மனம்

ஆனால் புரிந்து கொள்ளாமல்

விலகிப்போகிறாயே என் செய்வேன் நான் ...

*******

உனக்கான கோபம் மாதிரியே

எனக்கான கோபமும் ....

உனக்கான உணர்வுகள் மாதிரியே

எனக்கான உணர்வுகளும்.....

உனக்காக ஆறுதல் மாதிரியே

எனக்கான ஆறுதல் எங்கே என் அன்பே ....

******

ஓடி வந்து உன் கைகளில்

அடைக்கலமாகும் தருணங்களில்

நானிருக்க.....

கடைக்கண் பார்வையாய்

என்னை பரிதவிக்க விட்டு போவதென்ன

என் அன்பே ......

******

எல்லா நிமிடங்களும்

கடந்து போன பின்பு

பறந்து போன ஏக்கங்களை

மேற்கோள் காட்டி என்னை

தவிக்க வைத்து போவதென்ன என் அன்பே...

******

ஒவ்வொரு முறையும்

நீ கேட்பாய் என்று எதிர்பார்த்த

நிமிடங்களை நான் கண்ணிமைக்கும்

நேரத்தில் தவறவிட்டு

என் கோப தருணங்களில்

நீ கசங்கிய கவிதையாய்

மாறும்போது நான்

நொறுங்கித்தான் போகிறேன்

******

ஆனாலும்

என் சுவாசக்காற்றாய்

நீ இருக்கையில்

என் சுவாசத்தை நான் எப்படி

அடைத்துக்கொள்ள முடியும் ....

உயிர் வாழ முடியும் ....

*****

என் இயக்கமும் நீதான்

இயக்குபவளும்

நீதான்

எனக்கான காதலும் நீதான்

எனக்கான ஜீவனும் நீதான்

எனக்கான வெற்றியும் நீதான்

எனக்கான கோபமும் நீதான்

எனக்கான ஆறுதலும் நீதான்

எனக்கான காமமும் நீதான்

எனக்கான காவலும் நீதான்

யாதுமாகி யதுமாகியும் நீதான்

என் அன்பே

*******

உன்னில் ஒன்றி

உனக்கான ஏக்கமாய்

நானிருக்க

விரிந்த உன் இதயம் போல்

உன் கரங்களில் அடைக்கலமாகும்

இந்த வழி தவறிய ஆட்டுக்குட்டிக்கு

காலம் எப்போ வரும் கண்ணே

வழி மாறி விழி நீரோடு காத்திருக்கிறேன்

உனக்காக

தாய்மடியாய் உன் மென்மைக்காக ......

*********

கவர்ந்த பாடல் - 10

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்

நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்

ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்

ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீருற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே

கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே

பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால்

முகப்பரு ஞாபகமே

அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்

அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே

வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே

தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே

அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்

மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்...

கவர்ந்த பாடல் - 9

என்னை யாரென்று எண்ணி எண்ணி

நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடல் என்று

நீ கேட்கிறாய்

நான் அவள் பெயரை தினம்

பாடும் குயிலல்லவா

என் பாடல் அவள் தந்த

மொழியல்லவா ...

என்னை யாரென்று எண்ணி எண்ணி

நீ பார்க்கிறாய் ......

கவர்ந்த பாடல் - 8

சிலர் அழுவார்

சிலர் சிரிப்பார்

நான் சிரித்துக்கொண்டே

அழுகின்றேன்

சிலர் அழுவார்

சிலர் சிரிப்பார்

நான் அழுதுகொண்டே

சிரிக்கின்றேன் ...

காலம் ஒருநாள் மாறும்

என் கவலைகள் யாவும் தீரும்

வந்ததை எண்ணி அழுகின்றேன்

வருவதை எண்ணி சிரிக்கின்றேன்

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் .....

கவர்ந்த பாடல் - 7

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும் ...

******

எனது கைகள் மீட்டும் போது

வீணை அழுகின்றது

எனது கைகள் தழுவும்போது

மலரும் சுடுகின்றது

என்ன நினைத்து என்னை படைத்தான்

இறைவன் என்பவனே !

கண்ணை படைத்தது

பெண்ணை படைத்தாய்

இறைவன் கொடியவனே .....

******

பழைய பறவை பறந்த போது

பறந்து வந்ததே

புதிய பறவை எனது நெஞ்சை

கவர்ந்து போனதே

இன்று மட்டும் அமைதி இருந்தால்

வணங்குவேன் தாயே...!

இன்று மட்டும் அமைதி இருந்தால்

உறங்குவேன் தாயே .....!

*****

கவர்ந்த பாடல் - 6

விழியில் விழுந்து

இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக்கொள்ளும்

அந்தி பொழுதினில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையினில் இருப்பேன்

உயிரை திருப்பி தந்து விடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது

இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும் எனது

உயிர் உருகும் சத்தம் ....

கவர்ந்த பாடல் - 5

உள்ளத்தின் கதவுகள் கண்களடா

இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா

உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு

அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு ....

*****

காதல் என்பது தேன்கூடு

அதை கட்டுவதென்றால் பெரும்பாடு

காலம் நினைத்தால் கைகூடும்

வெறும் கற்ப்பனை என்றால் மனம் வாடும் ...

கவர்ந்த பாடல் - 4

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்கையில் நடுக்கமா
*****
வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை ...
எதையும் தாங்கும்
இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும்
அமைதி பிறக்கும் .......
*******
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு ...
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
******

கவர்ந்த பாடல் - 3

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

தெய்வம் ஏதுமில்லை...

நடந்ததையே நினைத்திருந்தால்

அமைதி என்றும் இல்லை...

முடிந்த கதை தொடர்வதில்லை

இறைவன் ஏட்டினிலே

தொடர்ந்த கதை முடிவதில்லை

மனிதன் வீட்டினிலே..

*******

ஆயிரம் வாசல் இதயம்

அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்

யாரோ வருவார் யாரோ இருப்பார்

வருவதும் போவதும் தெரியாது

ஒருத்தர் மட்டும் குடியிருந்தால்

அமைதி தொடர்ந்து விடும் ......

கவர்ந்த பாடல் - 2

உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி...
உள்ளம் என்பது ஆமை ....
*******
தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
உள்ளம் என்பது ஆமை....
*******
தண்ணீர் தணல் போல் தெரியும்
செந்தனளும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும்
அது நாள்பட நாள்பட புரியும்.....
உள்ளம் என்பது ஆமை .....
********

கவர்ந்த பாடல்

குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் அவளை
மறந்து விடலாம்....
அவளை மறப்பதற்கு ஒரு மனமிருந்தால்
குடித்து விடலாம் ....
ஆனால் இருப்பதோ ஒரு மனம்...ஒரு மனம் ...
என்ன செய்வேன்...என்ன செய்வேன்...
******


இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாழ ஒன்று

மறந்து வாழ ஒன்று

இரண்டு மனம் வேண்டும்....

******

இரவும் பகலும் இரண்டானால்

இன்பமும் துன்பமும் இரண்டானால்

உறவும் பிரிவும் இரண்டானால்

உள்ளம் ஒன்று போதாதே....

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாழ ஒன்று

மறந்து வாழ ஒன்று ...

இரண்டு மனம் வேண்டும்....

**********

கண்களின் தண்டனை காட்சி வழி

காட்சியின் தண்டனை காதல் வழி

காதலின் தண்டனை கடவுள் வழி

அந்த கடவுளை தண்டிக்க என்ன வழி

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாழ ஒன்று

மறந்து வாழ ஒன்று ....

********

Friday, June 5, 2009

ஆறுதல்

நீ

மறுபடி மறுபடி

என்னவென்று கேட்கும்போது

மௌனத்தையே என்னால் பதிலாக

கொடுக்கமுடிகிறது

என்னவென்று சொல்ல என்னால்

முடியவில்லை

சொன்னாலும் உன்னால்

அதற்க்கு தீர்வாக

கொடுப்பதற்கு ஒன்றும்

இல்லை .....

முடிந்து விட்ட எல்லைகள்

நம் இருவருக்கும் எமனாக

இருக்கையில்

எதைச் சொல்லி

நான் உன்னிடம் தேற்ற ....

******

என் வருத்தம்

இன்னதென்று தெரிந்து

நீண்ட நாள் நீ வருந்துவதை

காட்டிலும்

இன்னதென்றே தெரியாமல்

ஒரு நாள் மட்டும் வருந்தி

மறந்து போவதொன்றே

எனக்காக நீ கொடுக்கும்

ஆறுதல்...

*******

உனக்கான மெழுகாய்

நான் உருகிவிடவே ஆசை

வெளிச்சம் மட்டும் உனக்கு

கொடுத்து இருட்டில்

கரைந்து போகவே

இந்த மெழுகின் ஆசை....

******

வரமாய் நானிருந்து

உன் துன்பம் நீக்க வேண்டும்

என் சாபத்தை என்னில் நானே

புதைக்கவேண்டும்

புதை குழியில் உன்னைத்தள்ளி

உன் வாழ்க்கைக்கு

நான் முற்றுப்புள்ளியாய்

நானிருக்க விரும்பவில்லை .....

உன் வாழ்கையின்

தொடக்கபுள்ளியாய்

கோலம் போடவே ஆசை

*****

உனக்கான

கேள்விக்கு நான் பதிலாய்

இருக்கவேண்டும் .....

எனக்கான கேள்விகள்

என்னுள் புதைக்கப்படவேண்டும்

நீ உணராமல்...

உனக்கு வலிக்காமல்...

வலிகளையே

பார்த்து பழகிய

உனக்கு

நான் மருந்தாகவே ஆசை

உன் புண்ணிற்கு ...

******

என்னைச் சுற்றிலும்

என் சுற்றம்

என் பொருளையே தேடுகிறது

என்னைத் தவிர

எல்லாவற்றையும் கேட்கிறது ...

*******

வேண்டாத என்னை

என்னவென்று சொல்ல

விருந்தாளியாய்

இருந்துவிட்டு

மொய்யாக உன்னை

கொடுத்துவிட்டு போ

என்கிறது...

என்ன செய்வேன்.....

********