Thursday, April 9, 2009

புலம்பல்

நான் மனம் விட்டுச் சிரித்தே வெகுநாளாகிறது .....இயந்தரத்தனமாய் எல்லாம் இருக்கிறது.....

காலையில் எழுந்து காலை கடன்களை செய்து ஒரேமாதிரி செய்து செய்து இதுதான் செய்கிறோம் என்றே தோன்றாமல் வாழ்க்கை போய்கொண்டிருக்கிறது ....

நாட்கள்தான் நகர்கின்றனவே ஒழிய திருப்தி என்பதே என்னவென்று தெரியாமல் போய்கொண்டிருக்கிறது வாழ்க்கை அதோடு ஆயுளும் ........

நிறைந்த வாழ்வு எங்கிருக்கிறது .....தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது ஆனால் ஒரு முடிவு தெரிந்த பாடில்லை ....

எங்கே பாதை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் .....இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது ......எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் ......கவி கண்ணதாசனுடையவை

உண்மைதான் பயணம் எங்கே என்று தெரிந்து விட்டால் கடவுளை நம்பமாடோம் ...தான்தோன்றித்தனமாக போய்விடும்....அதனால்தான் எல்லாமே மறைபொருள் ரகசியமக்கப்பட்டதோ.....

மனம் மயங்குகிறது .....எதைநோக்கித்தான் என் பயணம் ...இல்லாத ஒன்றை இருக்கிறது என்று நம்பி போகிறேனோ .....

தேடு..என்பது எனக்கிடப்பட்ட கட்டளை ....நான் எதை நோக்கி தேடிக்கொண்டிருக்கிறேன் .....

இலக்கிலாத அம்பு போலே போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கின்றேன் ....ஆனால் எங்கே அமைதி எங்கே நிம்மதி...

நெஞ்சுக்கு நிம்மதி அது ஆண்டவன் சந்நிதி .....சொல்லிவிட்டார்கள் ஆனால் மனம் அதில் ஒன்றமாட்டேன் என்கிறதே ஏன் ஏன்?

கேள்விகள்தான் எத்தனை எத்தனை ஆனால் பதில் எங்கே.....

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும் கொட்டிவைத்த குப்பையாக வந்த உடம்பு ......அதற்கு குப்பன் சுப்பன் என்று பெயர் ......

பந்த பாச சேற்றில் வந்த இந்த தேகம் எந்த கங்கை ஆற்றில் கழுவினால் போகும் ....தெரியவில்லை ..

அடிபணிதல் வாழ்க்கையா ......இல்லை ஆர்பரிப்பதுதான் வாழ்க்கை .....சிறகை வெட்டாமல் உயர பறப்பதுதான் வாழ்க்கை ......

மனது குழம்புகிறது......இத்தனை நாளாக தெளிவில்லாமல் என் வாழ்வு சென்றதா .......தெளிவு எது ?

குப்பை மனது மீண்டும் மீண்டும் குப்பையை தேடுகிறது ....கிடைக்கவில்லையென்றால் அழுகிறது ......

அப்படி என்றால் வாழ்வதற்கான ஆதாரம் எது ?

மனம் மறுபடியும் பந்தப்படுகிறது .......உன்னைத்தான் நம்பி இருக்கிறேன் .....சாத்தியம் என்றே தோன்றுகிறது .......

No comments:

Post a Comment