Wednesday, May 19, 2010

காத்திருத்தல்

நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லர் அன்பு காட்டுவதில்...ஆனால் உன் மிதவாத தன்மைக்கு என் தீவிரவாதம் குடைபிடிக்கச் சொல்லும் தருணங்களை உருவாக்கி தருகிறதே நம் சூழல் அதைத்தான் என் எதிரி என்கின்றேன்....
அதற்காக நான் வருந்தவில்லை, ஆனால் என் ஏக்கத்தின் வெளிப்பாடுகளை சரியான விகிதத்தில் உன்னிடம் சொல்லமுடியாமல் எவ்வளவோ முறை தவித்திருக்கிறேன்.....
ஆனாலும் குறைந்தபாடில்லை என் தீவிரவாதம்.....அன்பைக்காட்டுவதில்....அதிகரித்துதான் இருக்கிறது உன் மிதவாதம்....
ஈரமான தருணங்களில் உன்னை கவர்ந்துகொள்ள என் கைகள் துடிக்க ஆனாலும் விலகித்தான் போகிறது உனக்கான நம் நெருக்கம்....
எதைக்கொண்டு என் அன்பைக்கட்டுவது, எதைக்கொண்டு என் உள்ளத்துடிப்பை உன்னிடம் பரிமாறிக்கொள்வது, நமக்கான ஆறுதல் எனக்காக உன் பேச்சிலும் உனக்காக என் பேச்சிலும் இருப்பதால்தான் இன்னமும் நடமாடிக்கொண்டிருகிறேன் ....
காதல் வாழ்க! அது படுத்தும் பாடு வாழ்க! உணர்ந்துகொண்டு உன்னைக்காதலிக்கவே விரும்புகிறேன்...
விழியில் விழுந்து என் இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே...
இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அன்பே பொழுதினில் வந்துவிடு...
அலைகள் உரசும் கரையினில் இருப்பேன் உயிரை திருப்பி தந்துவிடு...
உனக்கு மட்டும் கேட்கும் என் உயிர் உருகும் சத்தம்...
எனக்கு மட்டும் சொந்தம் உன் இதழ் கொடுக்கும் முத்தம்...
காத்திருக்கிறேன்......

No comments:

Post a Comment